Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Kerala Serial killer jolly about her routine satan poojas

    திருவனந்தபுரம்: விடிய விடிய சாத்தான் பூஜை நடத்தி இருக்கிறார் ஜோலி.. நரபலி என்பது இந்த சாத்தான் பூஜையின் ஸ்பெஷல் திங்... துர்மந்திரவாத பூஜை, சாத்தான் பூஜை, நரபலி என்று ஜோலி சொல்ல சொல்ல.. கேரள போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

    2002 முதல் 2016 வரை கணவர் ராய் தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேரை அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் அந்த வீட்டு மருமகள் ஜோலியை கைது செய்துள்ளனர்.

    இவருடன் உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு வார காலம் போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். அப்போது தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இப்போது திரும்பவும் அவர்களை விசாரிக்க 3 நாள் அனுமதி வேண்டும் என்று கேட்க, கோர்ட்டும் அதற்கு அனுமதி தந்துள்ளது. அதன்படி 2-ம் கட்ட விசாரணை நடந்து வருகிறது.

    தகவல்கள்

    தகவல்கள்

    அதில் ஜோலி சொன்ன தகவல்களை கேட்டு கேரள போலீசாருக்கு தலையே சுற்றி விட்டது. சயனைடை கோவை வந்து வாங்கி போயுள்ளார் ஜோலி. ஏற்கனவே கோவையில்தான் ஜோலிக்கு ஒரு பாய் ஃபிரண்ட் இருப்பதாக சொல்லப்பட்டது. அவரிடமும் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், கோயம்புத்தூர் வந்து விஷத்தை வாங்கி சென்றுள்ளது புதிய தகவலாக வெளிவந்துள்ளது.

    ஸ்கூட்டரில் வேலை

    ஸ்கூட்டரில் வேலை

    கோழிக்கோடு என்ஐடியில் வேலை செய்வது போலவே பாசங்கு செய்துள்ளார். இப்படியே 14 வருஷம் பாவ்லா காட்டி உள்ளார். காலையில் கார் அல்லது ஸ்கூட்டரில் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு, சாயங்காலம்தான் வீடு திரும்புவார்.

    சாத்தான் பூஜை

    சாத்தான் பூஜை

    இதைதவிர, ஜோலி சாத்தான் பூஜை நடத்தி வந்துள்ளார். அதாவது துர்மந்திரவாத பூஜை அது. கோழிக்கோடு மற்றும் கட்டப்பனையில் இந்த சாத்தான் பூஜை நடந்துள்ளது. இதில் ஜோலி தவறாமல் கலந்து கொண்டு இருக்கிறார். கட்டப்பனையில் கிருஷ்ணகுமார் என்ற ஜோசியக்காரர் இருக்கிறாராம். இவர்தான் சாத்தான் பூஜைகள் செய்வாராம். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியாதாம்.. மெம்பர் ஆக இருப்பவர்கள்தான் கலந்து கொள்ள முடியும்.

    நரபலி

    நரபலி

    இந்த பூஜையின் நோக்கம் பணம், கூரையை பிய்த்து கொண்டு கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்பதுதான். இது எல்லாவற்றையும்விட ஷாக், இந்த பூஜையின் ஹைலைட் நரபலியாம். இப்படி நரபலி தந்தால், பூஜை முழுமையாக நிறைவேறும் என்பது நம்பிக்கை போலும்.

    பிரட்டில் விஷம்

    பிரட்டில் விஷம்

    அதிலும் சாத்தான் பூஜையில் பெண் குழந்தைகளை கொல்வது ஒரு சென்டிமென்ட்.. அது கட்டாயமும்கூட.. ஒருவேளை, 6 பேரை ஜோலி கொன்றதுகூட இதற்காகத்தானோ, தன் 2-வது கணவரின் குழந்தை ஆல்பைனை சாப்பிடும் பிரட்டில் விஷத்தை தடவி கொடுத்து ஊட்டி கொன்றதும் இதற்காகத்தானோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

    போலீஸ் ஷாக்

    போலீஸ் ஷாக்

    ஜோலி அந்த குழந்தையை மட்டும் அல்லாமல் வேறு சில குழந்தைகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தாராம். சாத்தான் பூஜை, நரபலி என்ற விஷயமே இப்போதைக்கு கேரளாவில் கிலியை தந்து வரும் நிலையில், இன்னும் என்னவெல்லாம் இனி வரும் விசாரணையில் வெளிவர போகிறதோ தெரியவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+