பொய்யான வீடியோவை உருவாக்கி பரப்பியதால் பதற்றம்.. பிரபல யூடியூபரான பாஜக கவுன்சிலர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் ஒருவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக பொய்யான வீடியோவை உருவாக்கி பரப்பியதற்காக கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் பிளஸ் 2 தேர்வு முடிவு ரத்து என்று பொய் செய்தி வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிகில் மனோகர், கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள பொருவழி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக உள்ளார். அவர் மீது மாநில கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி புகார் அளித்ததால், அவர் கைது செய்யப்பட்டார்.

சென்ற வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் வீ கேன் என்ற பெயர் கொண்ட யூடியூப் சேனலில், பிளஸ் டூ தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக நிகில் மனோகர் என்பவர் கூறியிருந்தார். இது "அபாயகரமானது" என்று கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் சிவன் குட்டி, பாஜக வார்டு உறுப்பினரான நிகில் மனோகர் தனது யூடியூப் சேனல் மூலம் தவறான செய்திகளை பரப்பி உள்ளார்.இதற்காக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று பொய் செய்திகளை பரப்புவது சமூகத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றமாகும்.
இதை கல்வித்துறையில் பயங்கரமான செயலாக கருதுகிறோம். பாஜக உறுப்பினரின் இந்த செயலுக்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications