பதைபதைக்க வைக்கும் மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் ஒரே மாதத்தில் 7 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக மூளையை தின்னும் அமீபா நோய் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளா மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் இயற்கை சீற்றங்களுக்கும், நோய் பரவலும் சற்று அதிகமாகவே இருக்கும். பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் அதிகளவு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

40 பேர் உயிரிழப்பு
நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை சுமார் 20 பேர் மூளையை தின்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கேரளா மாநிலத்தில் மூளையை தின்னும் அமீபா நோயால் சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்..
திருவனந்தபுரம் அருகே உள்ள அனடு பகுதியைச் சேர்ந்தவர் வினயா (வயது 26). இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மோசமானதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இல்லத்தரசி பலி
கடந்த 40 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். கேரளா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், "வினயாவுக்கு அந்த வைரஸ் எப்படி பரவியது என்று விசாரணை நடத்தி வருகிறோம். அவர் இல்லத்தரசியாக தான் உள்ளார். தன் வீட்டு கிணற்றில் இருந்த தண்ணீரை குடித்தபோது இந்த நோய் பரவியிருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.
இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் ஆய்வு நடத்த உள்ளனர். அங்குதான் பாதிப்புகள் அதிகம் இருக்கும் நிலையில் வைரஸ் எப்படி பரவியது என்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். மாநிலத்தில் மூளையை தின்னும் நோய் பரவிக் கொண்டிருக்கிறது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மக்கள் அச்சம்
அந்த அமீபா மூக்கு வழியாக நுழைந்து உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் மாசுபட்ட நீர் நிலைகள் மற்றும் குளோரின் கலக்கப்பட்டாத நீர் நிலைகளில் குளிக்கும்போது இந்த அமீபா தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை அதுபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் முகம் கழுவுதல், வாய், மூக்கு துடைப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்." என்று கூறியுள்ளனர். இந்த பிரச்சனை காரணமாக சபரிமலை செல்லும் தங்கள் மாநில பக்தர்களுக்கு கர்நாடக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications