Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Bumper: கேரள லாட்டரியில் 20 கோடிக்கு பட்ட பாடு இருக்கே.. நிம்மதி கொடுத்த தீர்ப்பு! கையில் எவ்வளவு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அடித்தது. இந்த பரிசுத் தொகை தனக்கே அடித்ததாகவும், அந்த டிக்கெட்டை தவறுதலாக ஒருவருக்கு கூரியர் செய்துவிட்டதால் பரிசு உரிமை கோரி யார் வந்தாலும் எனக்கே தொகையை வழங்குமாறு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக விசாரித்த கேரள நீதிமன்றம், லாட்டரி சீட்டை ஒப்படைத்த நபருக்கே ரூ.20 கோடியை வழங்க உத்தரவிட்டது. இதனால் கடும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ரூ.20 கோடி பரிசினை பெற்றுள்ளார். கமிஷன், வரி பிடித்தம் போக அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்களை இங்கு காணலாம்.

Kerala Bumper 20 Crore Lottery Battle Ends Court Verdict Brings Relief How Much Will the Winner Actually Receive

ரூ.20 கோடி கேரள பம்பர் லாட்டரி

கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்தது. கோட்டயத்தின் கஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது.

Kerala Lottery: 10 கோடி! அடிக்க போகுது யோகம்.. கேரளாவில் அனல் பறக்கும் சம்மர் பம்பர் லாட்டரி! டாப் எங்கே தெரியுமா?
Kerala Lottery: 10 கோடி! அடிக்க போகுது யோகம்.. கேரளாவில் அனல் பறக்கும் சம்மர் பம்பர் லாட்டரி! டாப் எங்கே தெரியுமா?

ஆனால் வாங்கி சென்ற நபர் யாரென்ற விவரம் எனக்கு நினைவு இல்லை லாட்டரி ஏஜென்சி கடைக்காரர் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேல் ஆகியும் வெற்றியாளர் யார் என்ற விவரம் தெரியாமல் இருந்த நிலையில், திடீர் திருப்பமாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

நிம்மதி கொடுத்த தீர்ப்பு!

அதில், ரூ.20 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டை தானே வாங்கியதாகவும் அதில், தன்னுடைய பெயர், முகவரி, கையெழுத்து ஆகியவை உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த டிக்கெட்டை ஐயப்பர் பக்தர் ஒருவருக்கு அனுப்பும் பிரசாதத்தில் தவறுதலாக அனுப்பி விட்டதாகவும், இந்த டிக்கெட்டை கொரியர் ஊழியர் எடுத்து இருக்கலாம் எனவே, பரிசுத்தொகையை எனக்கே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

Bumper Lottery: 20 கோடி விழுந்த லாட்டரி டிக்கெட்! ஐயப்ப பக்தருக்கு தெரியாமல் அனுப்பிட்டேன்! கேரள ஹைகோர்ட்டில் வழக்கு
Bumper Lottery: 20 கோடி விழுந்த லாட்டரி டிக்கெட்! ஐயப்ப பக்தருக்கு தெரியாமல் அனுப்பிட்டேன்! கேரள ஹைகோர்ட்டில் வழக்கு

இதனால் பரிசுத்தொகை வழங்குவதை நிறுத்தி வைத்த கேரள உயர் நீதிமன்றம், விசாரணைக்கு பின் கடந்த இரு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இதில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கூறியது போல, டிக்கெட்டில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று அவரது மனுவை நிராகரித்து, டிக்கெட்டை சமர்ப்பித்த நபருக்கு ரூ.20 கோடி பரிசு வழங்க உத்தரவிட்டது.

எவ்வளவு கையில் கிடைக்கும்?

பெரும் சட்ட போராட்டத்திற்க்கு பிறகு முதல் பரிசு லாட்டரி வாங்கியவரின் கைக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. ரூ. 20 கோடியில் அவருக்கு வரி பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 20 கோடி பரிசுத்தொகையில் 63 சதவீதம் அளவிற்கு அவருக்கு பரிசுத்தொகை கிடைக்கும்.

முதல் பரிசுத்தொகையில் ஏஜென்சி கமிஷனாக 12 சதவீதம் பிடிக்கப்படும். வருமான வரித்தொகையாக 30 சதவீதமும், பிடித்துக்கொள்ளப்படும். இதன்படி முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு சுமார் ரூ.12.7 கோடி முதல் பரிசாக கையில் கிடைக்கும்.

பரிசு வென்றவர் யார்?

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைத்து இருந்தார். இதனை எதிர்த்து தான் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் கூறியதுபோலவே லாட்டரி டிக்கெட்டின் பின்புறம் பெயர் எதுவும் எழுதாமல் இருந்துள்ளது. இதையடுத்து தான் நீதிமன்றம் எர்ணாகுளத்தை சேர்ந்தவரே வெற்றியாளர் என்று உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+