Kerala Bumper: கேரள லாட்டரியில் 20 கோடிக்கு பட்ட பாடு இருக்கே.. நிம்மதி கொடுத்த தீர்ப்பு! கையில் எவ்வளவு கிடைக்கும்?
திருவனந்தபுரம்: கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அடித்தது. இந்த பரிசுத் தொகை தனக்கே அடித்ததாகவும், அந்த டிக்கெட்டை தவறுதலாக ஒருவருக்கு கூரியர் செய்துவிட்டதால் பரிசு உரிமை கோரி யார் வந்தாலும் எனக்கே தொகையை வழங்குமாறு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக விசாரித்த கேரள நீதிமன்றம், லாட்டரி சீட்டை ஒப்படைத்த நபருக்கே ரூ.20 கோடியை வழங்க உத்தரவிட்டது. இதனால் கடும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ரூ.20 கோடி பரிசினை பெற்றுள்ளார். கமிஷன், வரி பிடித்தம் போக அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்களை இங்கு காணலாம்.

ரூ.20 கோடி கேரள பம்பர் லாட்டரி
கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் XC 138455 என்ற எண்ணுக்கு முதல் பரிசு அடித்தது. கோட்டயத்தின் கஞ்சிரப்பள்ளி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது.
ஆனால் வாங்கி சென்ற நபர் யாரென்ற விவரம் எனக்கு நினைவு இல்லை லாட்டரி ஏஜென்சி கடைக்காரர் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேல் ஆகியும் வெற்றியாளர் யார் என்ற விவரம் தெரியாமல் இருந்த நிலையில், திடீர் திருப்பமாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
நிம்மதி கொடுத்த தீர்ப்பு!
அதில், ரூ.20 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டை தானே வாங்கியதாகவும் அதில், தன்னுடைய பெயர், முகவரி, கையெழுத்து ஆகியவை உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த டிக்கெட்டை ஐயப்பர் பக்தர் ஒருவருக்கு அனுப்பும் பிரசாதத்தில் தவறுதலாக அனுப்பி விட்டதாகவும், இந்த டிக்கெட்டை கொரியர் ஊழியர் எடுத்து இருக்கலாம் எனவே, பரிசுத்தொகையை எனக்கே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இதனால் பரிசுத்தொகை வழங்குவதை நிறுத்தி வைத்த கேரள உயர் நீதிமன்றம், விசாரணைக்கு பின் கடந்த இரு தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. இதில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கூறியது போல, டிக்கெட்டில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்று அவரது மனுவை நிராகரித்து, டிக்கெட்டை சமர்ப்பித்த நபருக்கு ரூ.20 கோடி பரிசு வழங்க உத்தரவிட்டது.
எவ்வளவு கையில் கிடைக்கும்?
பெரும் சட்ட போராட்டத்திற்க்கு பிறகு முதல் பரிசு லாட்டரி வாங்கியவரின் கைக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. ரூ. 20 கோடியில் அவருக்கு வரி பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 20 கோடி பரிசுத்தொகையில் 63 சதவீதம் அளவிற்கு அவருக்கு பரிசுத்தொகை கிடைக்கும்.
முதல் பரிசுத்தொகையில் ஏஜென்சி கமிஷனாக 12 சதவீதம் பிடிக்கப்படும். வருமான வரித்தொகையாக 30 சதவீதமும், பிடித்துக்கொள்ளப்படும். இதன்படி முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு சுமார் ரூ.12.7 கோடி முதல் பரிசாக கையில் கிடைக்கும்.
பரிசு வென்றவர் யார்?
எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைத்து இருந்தார். இதனை எதிர்த்து தான் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் கூறியதுபோலவே லாட்டரி டிக்கெட்டின் பின்புறம் பெயர் எதுவும் எழுதாமல் இருந்துள்ளது. இதையடுத்து தான் நீதிமன்றம் எர்ணாகுளத்தை சேர்ந்தவரே வெற்றியாளர் என்று உத்தரவிட்டுள்ளது.
-
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி














Click it and Unblock the Notifications