வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த மத்திய அரசு.. கேரள முதல்வரின் யுஏஇ பயணம் ரத்து.. காரணம் இதுதான்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் அபுதாபியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டு இருந்தார். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக கிடப்பில் போட்ட மத்திய அரசு தற்போது அனுமதி கொடுக்க மறுப்பு தெரிவித்தள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். நாட்டிலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கேரளாதான். இங்கும் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், பாஜகவும் அங்கு தீவிர அரசியல் செய்து வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரசு அமீகரத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். பினராயி விஜயன் மருமகனும் அமைச்சருமான முகம்மது ரியாஸ், கேரள உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததது.
இந்த அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு அமீரகம் வருவதாக பினராயி விஜயனும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தான் வெளிநாடு செல்வதற்காக முறைப்படி மத்திய அரசிடம் பினராயி விஜயன் அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முதலில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது.
ஆனால், முதல்வர் கலந்து கொள்ளும் அளவிற்கு இது அவ்வளவு முக்கிய மாநாடு இல்லை என்று கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுப்பதாகவும் அதிகாரிகள் மட்டும் செல்லலாம் என்று கூறியது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்திடம் கேரள முதல்வர் அலுவலகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக முடிவில் தலையிட முடியாது எனக் கூறி பிரதமர் அலுவலகமும் மறுத்து விட்டது.
இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டில் பினராயி விஜயன் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் தனது திட்டத்தை ரத்து செய்தார். முதல்வர் பினராயி விஜயனுக்கு பதிலாக தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications