கையளவு மிளகுக்காக அண்ணன் குத்திக் கொலை.. "கொடூர" தம்பிக்கு ஆயுள் தண்டனை.. கேரளாவில் ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: தான் நட்டு வளர்த்த செடியில் இருந்து மிளகு பறித்ததற்காக தன் அண்ணனை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து காசர்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக நம் சமூகத்தில் குடும்பப் பிணைப்பு குறைந்துக் கொண்டே வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. உறவுகளை விட பணம்தான் முக்கியம் என்ற சுயநல எண்ணம் தலைதூக்க தொடங்கிவிட்டது. ஒருகாலத்தில், குடும்பத்தில் யாருக்கு இடையிலாவது ஏதேனும் தகராறு ஏற்பட்டால் பெரியவர்கள் பேசி சமரசம் செய்து வைப்பது வழக்கம்.
ஆனால், இப்போது யார் பேச்சையும் கேட்க யாரும் தயாராக இல்லை. சிறிய பிரச்சினை என்றாலும் கூட கொலை வரை சென்றுவிடுவது இன்று சர்வசாதாரணமாகி விட்டது. அந்த வகையில், கேரளாவில் அண்ணன் தம்பிக்கு இடையே மிக அற்பமான விஷயத்துக்காக ஏற்பட்ட தகராறு கொலையில் சென்று முடிந்திருக்கிறது.

சொத்தை பிரித்து கேட்டு தகராறு
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவப்ப நாயக். இவருக்கு புத்தா நாயக் (38) மற்றும் பிஜு (35) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் புத்தா நாயக்குக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், பிஜுவுக்கு திருமணம் ஆகவில்லை. இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் தேவப்ப நாயக் இறந்துவிட்டார். தந்தை இறந்ததால் வீட்டை பாகப்பிரிவினை செய்து தனது பங்கை கொடுக்க வேண்டும் என பிஜு கேட்க தொடங்கினார். ஆனால், அண்ணன் புத்தா நாயக் இதை விரும்பவில்லை. இதனால் அண்ணன் - தம்பிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மிளகு பறித்ததால் ஆத்திரம்
இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி, அண்ணன் புத்தாநாயக், வீட்டு சமையலுக்காக தோட்டத்தில் இருந்த செடியில் இருந்து மிளகுகளை பறித்துள்ளார். இந்நிலையில், இரவு மது அருந்திவிட்டு வந்த பிஜு, செடியில் இருந்து மிளகுகள் பறிக்கப்பட்டதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். "நான் நட்டு வைத்து வளர்க்கும் செடியில் இருந்து நீ எப்படி மிளகு பறிக்கலாம்" எனக் கூறி அண்ணன் புத்தா நாயக்கிடம் பிஜு தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற புத்தா நாயக்கின் மனைவி சீதாவை பிஜு தள்ளிவிட்டுள்ளார்.

கொடூரக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த புத்தா நாயக், தம்பி பிஜுவை அடித்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து புத்தா நாயக்கின் மகன் ராஜேஷின் கழுத்தில் வைத்த பிஜு, அவனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது மகனை காப்பாற்ற புத்தா நாயக் அருகே சென்ற போது, பிஜு தான் வைத்திருந்த கத்தியால் புத்தா நாயக்கின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே புத்தா நாயக் உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை
இதுகுறித்து புத்தா நாயக் மனைவி சீதா அளித்த புகாரின் பேரில், போலீஸார் பிஜுவை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக காசர்கோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications