கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலச் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு எந்த கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக முக்கியமான சர்வே வெளியாகியுள்ளது. அதில் சில ஆச்சரியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அங்கு பாஜகவின் என்டிஏ கணிசமான வளர்ந்துள்ளது சர்வேயில் தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளா தேர்தல் தொடர்பாக புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கேரளாவில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு
VoteVibe நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது. அதில் அங்கு இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே கடுமையான மோதல் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெறும் சில தொகுதிகள் தான் அங்கு ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
கடும் போட்டி
வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி என இரு கூட்டணிகளும் ஏறக்குறைய சமமான வாக்கு சதவீதத்தைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடையே 36.6% ஆதரவு இருக்கும் சூழலில், இடதுசாரி கூட்டணிக்கு 36.5% ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணியின் வளர்ச்சியும் கூட அங்குக் கணிசமாக உள்ளது. அங்கு என்டிஏ கூட்டணி சுமார் 14.9% வாக்கு சதவீதத்துடன் தனது வாக்கு வங்கியைக் கணிசமாக உயர்த்தியுள்ளது.
கால் பதிக்கும் பாஜக
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் இடதுசாரி கூட்டணி 68 முதல் 73 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 64 முதல் 70 இடங்களையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணிக்கு அதிகபட்சமே இரு இடங்கள் கிடைக்க மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் வரை பாஜக கேரளாவில் ஒரு இடத்திலும் வெல்லாத நிலையில், இந்த முறை 2 இடங்களில் வென்று கால்பதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர்
யார் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்விக்கும் கடும் போட்டி இருக்கிறது. தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வி.டி. சதீசன் ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே சுமார் 29% வாக்காளர்களின் ஆதரவுடன் உள்ளனர். இது தவிர பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் 10.8% ஆதரவுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இடதுசாரிகளின் கே.கே. ஷைலஜா 9.3% ஆதரவைப் பெறும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் 8.4% ஆதரவுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
முன்னதாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி சரித்திர சாதனை படைத்தது. அந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி, மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அங்கு ஆட்சியைத் தக்கவைத்த முதல் கூட்டணி என்ற பெருமையையும் பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களைப் பெற்ற நிலையில், பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
கேரளாவைப் பொறுத்த வரை இந்த முறையும் அங்கு வழக்கம் போல ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கும் சூழலில், தமிழகம் உள்ளிட்ட பிற மாநில தேர்தல்களோடு மே 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications