கேரள காட்டு பகுதியில் இறந்த 5 வயது யானை.. பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் 5 வயது யானையின் தாடையில் முறிவு ஏற்பட்டு இறந்த நிலையில் அது வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக யானைகள் கொடூரமான முறையில் இறக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதிலும் கடந்த மாதம் கரு தரித்த யானை ஒன்று இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த யானை வெடி பொருள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை உண்டதால் வாய் சிதறி உணவு உண்ண முடியாத கோர நிலைக்கு சென்று கடைசியில் இறந்தது.
இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு 5 வயது யானை அகாலி வனப்பகுதிக்குள்பட்ட வீட்டிகுண்டு பகுதியில் இறந்தது.

பழங்கள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் இந்த யானை ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமல் இருந்தது. பின்னர் அதன் உடல்நிலை மெலிந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்தது. இந்த யானை வெடிபொருள் நிரப்பப்பட்ட பழங்கள் அல்லது தேங்காயை சாப்பிட்டிருக்கும். இந்த யானை இறப்பதற்கு மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன.

சேம்பிள்கள்
யானையின் பிரேத பரிசோதனை நேற்று காலை நடத்தப்பட்டது. அதில் யானையின் தாடையில் முறிவு ஏற்பட்டிருந்தது. அதன் நாக்கும் கிழிந்திருந்தது. அது நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் வயிற்றில் கட்டி இருந்தது. யானையின் உடலிலிருந்து நிறைய சேம்பிள்களை எடுத்தோம். அவற்றை தடயவியல் துறைக்கு அனுப்பியிருந்தோம்.

சுற்றி திரிந்த யானை
அந்த யானைக்கு வெளிப்புறத்தில் காயம் ஏதும் இல்லை. அது போல் பட்டாசு வெடித்ததால் அந்த யானையின் வாயில் காயம் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. அண்மையில் இந்த யானை மற்ற யானை கூட்டங்களுடன் தென்படவில்லை. எனவே அந்த யானை தமிழக வனப்பகுதியிலிருந்து சுற்றி திரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Recommended Video

வாடிக்கை
இந்த யானை இறந்து கிடந்தது குறித்து அந்த காட்டில் உள்ள பழங்குடியினர் தங்களுக்கு தகவல் தெரிவித்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மே மாதம் 27-ஆம் தேதி 15 வயது கருவுற்ற யானை ஒன்று சைலன்ட் பள்ளத்தாக்கில் உணவில் மறைத்து வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து வாயில் பலத்த காயமடைந்து கிள்ளியாறில் நின்ற நிலையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. காட்டு பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து பயிர்களை சேதம் செய்வதால் உள்ளூர்வாசிகள் இதுபோல் பழங்களில் பட்டாசுகளை நிரப்பி கொடுப்பது வாடிக்கையாகி அது அந்த விலங்கின் உயிருக்கே உலை வைக்கிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications