பினராயி அரசு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது.. கவனம்.. பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

கேரளாவில் சபரிமலையை வைத்து பினராயி அரசு பெரிய மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலையை வைத்து பினராயி அரசு பெரிய மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து நேற்று கோவிலுக்கு சென்றார். ஆனால் அவர் தொண்டர்களுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.இந்த நிலையில் கடைசியாக பொன்.ராதாகிருஷ்ணன் அரசு பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சபரிமலையில் கேரள அரசின் செயல்பாடு குறித்தும், கேரள போலீஸ் அவரிடம் கோபமாக நடந்து கொண்டது குறித்தும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

அதில், கேரள அரசு மாஸ்டர் பிளானுடன் செயல்படுகிறது. சபரிமலையை வைத்து கேரள அரசு பெரிய திட்டம் போட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கேரள அரசின் திட்டங்கள் விரைவில் வெளியே வரும்.

மரியாதை

மரியாதை

சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் சதித்திட்டம் நடக்கிறது. இங்கு கோவிலுக்கான மரியாதையை போலீஸ் கொடுக்கப்படவில்லை. பக்தர்கள் மரியாதையுடன் நடத்தப்படவில்லை.

செருப்பு - ஷு

செருப்பு - ஷு

சபரிமலையில் செருப்பு அணிய கூடாத இடத்தில் கூட ஷூ அணிகிறார்கள். கேரள அரசு சபரிமலையை வைத்து அரசியல் செய்கிறது. கேரள போலீஸ் மக்களிடம் மோசமாக நடந்து கொள்கிறது.

பாகுபாடு

பாகுபாடு

என்னிடமும் கேரள போலீஸ் முறையின்றி நடந்து கொண்டது. கேரள போலீஸ் பாகுபாடுடன் நடந்து கொள்வது எல்லோருக்கும் தெரியும். கேரளா போலீஸ் பாஜக தலைவர்களிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறது, என்று கோபமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+