Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரக்கமே இல்லையா! வயநாட்டு மக்களின் நிவாரணத்தொகையில் கை வைத்த வங்கிகள்.. இஎம்ஐ பிடித்ததால் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகையில் இருந்து இ.எம்.ஐ தொகையை வங்கிகள் பிடித்ததும் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள வங்கியின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயனும் வங்கியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா கடந்த மாத இறுதியில் பெரும் துயரத்தை எதிர்கொண்டது. கேராளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில் சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்தது.

Wayanad Landslide Kerala


வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் 100-க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மீட்பு பணிகள் நடைபெற்றது. முப்படைகளும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.

பிரதமர் மோடி நேரடியாக சென்று நிலச்சரிவு பாதிப்பை ஆய்வு செய்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை கேரள அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கிற்கு இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டது. சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த தொகை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் நிவாரண தொகையில் இஎம் ஐ தொகையை பிடித்தம் செய்ததாக வங்கிகள் மீது குற்றச்சட்டு எழுந்துள்ளது. கேரளா கிராமிய வங்கிதான் இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கனவே பெற்று இருந்த கடன் தொகைக்கான இ.எம்.ஐ யாக ரூ. 2 ஆயிரம் பிடித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள வங்கியின் இந்த செயலைக் கண்டித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர் அமைப்புகளும் போரட்டத்தில் ஈடுபட்டன.

பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து இ.எம்.ஐ தொகை பிடிக்க கூடாது என்றும் பிடிக்கப்பட்ட கடன் தவணை தொகையை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாணவர் அமைப்பை சேர்ந்த இளைஞர் கூறுகையில், "வங்கியின் செயல் மனித தன்மையற்றது. வங்கி அதிகாரிகள் மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்றார்.

இதற்கிடையே பிடிக்கப்பட்ட கடன் தவணை தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பில் பங்க்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் வங்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும் எனவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+