'காதலனுக்கு பாயசம்' போட்ட காதலி கிரீஷ்மாவை ஞாபகம் இருக்கா... உச்ச நீதிமன்றத்தில் போட்ட பரபரப்பு மனு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கொலை வழக்கை தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு மாற்றக்கோரி, அந்த மாணவனின் காதலி கிரீஷ்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரள மாநிலம் பாரசாலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷாரோன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததார். இவர் அதே கல்லூரியில் படித்த கிரீஷ்மாவை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மாவுக்கு அவரது பெற்றோர் தங்களுக்கு பிடித்த இடத்தில் வேறு மாப்பிள்ளை பார்த்தார்கள். இதனால் கிரீஷ்மா ஷாரோனை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார்.
இதன்படி கிரீஷ்மா, தனது காதலன் ஷரோனை விட்டுவிலக பலமுயற்சிகள் செய்திருக்கிறார். ஆனால் ஷரோன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து ஷாரோனை கொலை செய்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக ஷாரோனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிரீஷ்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளாவை உலுக்கிய இந்த வழக்கு, அம்மாநிலத்தில் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பல மாதங்களாக சிறையில் இருந்த கிரீஷ்மா அண்மையில் ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி கிரீஷ்மாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்தநிலையில், கிரீஷ்மா சார்பில் அவரது வழக்கறிஞர் ஸ்ரீராம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நெய்யாற்றின்கரையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும். என்று வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கை கேரளாவில் நடத்துவது என்பது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என கூறினார்.

முன்னதாக சம்பவம் தமிழக எல்லையில் நடந்த நிலையில், கேரளாவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அப்போது விவாதம் எழுந்த நிலையில் சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. சட்ட நிபுணர்களின்அறிவுறுத்தலின் பேரில் இந்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.இந்நிலையில் தான் தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications