"ஹை அலர்ட்.." கேரளாவில் காய்ச்சலால் அடுத்தடுத்து இருவர் பலி! நிபா வைரஸ் பாதிப்பு என சந்தேகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும் திரும்புவோரும் அதிகம். இதன் காரணமாகவே எந்தவொரு புது பாதிப்பு ஏற்பட்டாலும் அது கேரளாவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரஸ் கூட இந்தியாவில் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளா உயிரிழப்பு: இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அலர்ட் மோடில் இருக்கிறது. கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் திடீரென உயிரிழந்த நிலையில், அம்மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல உயிரிழந்தவர்களில் ஒருவரின் உறவினர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில், நேற்றிரவு சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் உடனடியாக உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார். மாநிலத்தில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பாதிப்பு: கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி 49 வயது ஆண் உயிரிழந்தார். அவரது மகன் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இரண்டாவதாக 40 வயதான நபர் திங்கள் இரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் நிப வைரசுக்கான சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இறந்த நோயாளிகள் காய்ச்சல் மற்றும் நிமோனியா அறிகுறிகளுக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர். உயிரிழந்த இருவரின் வீடுகள் 20 கிமீ தூரத்திற்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
அச்சம்: இப்போது வரை கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு முறை நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கடந்த மே 2018 இல் பெரம்பராவில் நிபா பாதிப்பால் 17 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2021இல் கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபாவால் உயிரிழந்தார். அப்போது அவர் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications