சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள்
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை, "ரத்த பணம்" எனக்கூறப்படும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பணம் வழங்கி கேரள மக்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரங்கள் வருமாறு:-
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். 46 வயதான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு டிரைவர் பணிக்கு சென்றார். சவுதியில் தான் வேலை பார்த்த வீட்டு உரிமையாளரின் 15 வயது மகன் அனஸ் அல் பாயிஸ் என்ற சிறுவனை பராமரிப்பது, அவனை காரில் அழைத்து செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

மரண தண்டனை விதிப்பு
இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சிறுவனை காரில் அழைத்து சென்ற போது அப்துல் ரஹீமின் கை பட்டு சிறுவனுக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச குழாய் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. இதில் செயற்கை சுவாசம் மூலமாக உயிர் வாழ்ந்து வந்த சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து அந்த நாட்டின் சட்டப்படி கொலை குற்றம் என கருதப்பட்டு ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தால் ரஹீமை விடுவிக்க முடியும் என்ற நிலை சவுதி அரேபிய சட்டத்தில் உள்ளது. இதன்படி, பெரும் சட்ட போராட்டம் நடைபெற்றது. சிறுவனின் குடும்பத்தினர் ரூ.34 கோடி பெற்றுக்கொண்டு பொது மன்னிப்பு வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அப்துல் ரஹீமை மீட்க மலையாளிகள் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது.
34 கோடி ரூபாய் கொடுத்த கேரள மக்கள்
34 கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டு அல் பாயிசின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதை ஏற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழக்கை வாபஸ் செய்தனர். அதன்பிறகு அவருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அப்துல் ரஹீம், நேற்று கேரளா திரும்பினார். ரியாத்தில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் வந்தடைந்த ரஹீமை, அவரது உறவினர்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விமான நிலையத்தில் தொழிலதிபர் பாபி செம்மண்ணூர் ரஹீமை கட்டித்தழுவி வரவேற்றார். அப்போது ஏராளமான மக்கள் மற்றும் ஊடகத்தினர் அங்கு திரண்டிருந்தனர். ரஹீம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'தம்ஸ்-அப்' சைகை காட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹீம், "எனக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்றார். ரஹீம் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்க, கேரள மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இந்தப் பெரும் தொகையை திரட்டியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?














Click it and Unblock the Notifications