Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேக் பிடிக்கல.. குறுக்கே வந்த மாடு மீது மோதி தடம்புரண்ட சோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில்.. அலறிய பயணிகள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா பாலக்காடு மாவட்டத்தில் நீலாம்பூர் ரோடு-சோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் மாடு மீது மோதிய நிலையில் தண்டவாளத்தை விட்டு ரயில் இறங்கி தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் நீலாம்பூர் ரோடு-சோரனூர் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06474) இயங்கி வருகிறது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் நீலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு சோரனூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.

Kerala Nilambur Road-Shoranur Express Special train derailed at Vallapuzha in Palakkad after hit cattle

இந்நிலையில் வழக்கம்போல் இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு கேரளா நீலாம்பூர் ரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

இந்த ரயில் பாலக்காட்டில் உள்ள வல்லப்புழா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரயில் தண்டவாளத்தில் மாடுகள் வந்தது. இதை பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்தார். மாடு மீது மோதாமல் ரயிலை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். ஆனால் ரயிலின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் என்ஜின் டிரைவரால் ரயிலை கட்டுப்படுத்த முடியவில்லை.

ரயில் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததால் மாடுகள் மீது மோதியது. அதோடு மாடு மீது மோதிய ரயில் திடீரென்று தடம் புரண்டது. ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றது. இந்த வேளையில் பயணிகள் அலறியபடி ரயிலில் இருந்து வேகமாக இறங்கினர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியை மேற்கொண்டனர். மேலும் ரயில் தடம் புரண்டது பற்றியும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

இதுபற்றி பாலக்காடு ரயில்வே மண்ட மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், ‛‛நீலாம்பூர் ரோடு-சோரனூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு அருகே வல்லபுழாவில் தடம் புரண்டது. மாடுகள் மீது ரயில் மோதி தடம் புரண்டது. இதில் காயம், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தில் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+