சபரிமலை விவகாரம்.. கேரள சட்டப்பேரவை முடக்கம்.. எதிர்க்கட்சிகள் சத்தியாகிரக போராட்டம்
சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ள
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் கேரள சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் போராட்டம் வெடித்தது.
சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால், மோதல் மேலும் முற்றியது.
இந்தநிலையில், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முடக்கி உள்ளனர். சபரிமலையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளை நீக்குமாறு அரசை வலியுறுத்தி பதாகைகளை உயர்த்தினர்.
இந்த பிரச்சினைக்கு பதில் அளித்த முதல்வர் பினராயி விஜயன், சபரிமலையில் விதித்த கட்டுப்பாடுகளை நீக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து, சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, சபரிமலை கோவிலில் நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் போலீசாரின் கெடுபிடியால் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை 4 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனைவரும் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.