Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே "எத்து" மாமியாரை.. உடம்பே நடுங்கிடுச்சு.. ஐயோ டீச்சர் மருமகள்.. வீட்டுக்கே வந்துட்டாங்க போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: 2 நாட்களாகவே ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, பதற வைத்து வருகிறது.. இந்த வீடியோவை பார்க்கும்போது, ஈரக்குலையே நடுங்கிவிடுகிறது..!!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேவலக்கரையைச் சேர்ந்தவர் தாமஸ்.. இவரது மனைவி மஞ்சுமோள்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. தாமஸின் அம்மா எலியம்மா வர்கீஸ்.. இவருக்கு 80 வயதாகிறது.. தன்னுடனேயே அம்மாவையும் வீட்டில் வைத்து கவனித்து வருகிறார் தாமஸ்.

Kerala Police arrested School Teacher and what happened to her 80 year old Mother in law

மாமியார்: இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், எலியம்மா ஹாலில், சேரில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருக்கிறார்.. அப்போது, தாமஸின் குழந்தை, தான் உட்காருவதற்கு சேர் கேட்கிறது.. ஆனால், குழந்தை கேட்பதை எலியம்மா கவனிக்காமல் டிவி பார்த்தபடியே உள்ளார்.

அப்போது, அங்கு வந்த மருமகள் மஞ்சுமோள், "என்னுடைய மகள் உட்காருவதற்கு சேர் தரமாட்டியா?" என்று கோபமாக மாமியாரை திட்டுகிறார்.. பிறகு, சேரில் உட்கார்ந்து இருந்த மாமியாரை, இரு கைகளாலும் பிடித்து கொடூரமாக கீழே தள்ளிவிடுகிறார். இதில், கீழே தொப்பென்று விழுந்துவிட்டார் எலியம்மாள். முட்டி, கைகளில் அடிபட்டு, வலியால் அழுதுகொண்டே விரல்களால் தேய்த்து கொள்கிறார்.. பிறகு, தட்டுத்தடுமாறி மெல்ல ஊன்றி எழுந்து வீட்டிற்குள் போய்விட்டார் எலியம்மாள்.

பலவீனம்: இந்த சம்பவத்தை வீட்டிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தன்னை வீடியோ எடுப்பது தெரிந்தும்கூட, மஞ்சுமோள் அசரவேயில்லை.. எதற்கும் அஞ்சவுமில்லை. மாறாக, தன்னுடைய மேலாடை உயர்த்தி காட்டினார். இதுவும், வீடியோவில் பதிவாகி உள்ளது. 80 வயது என்பதால், எலியம்மாள் பார்ப்பதற்கே பலவீனமாக காணப்படுகிறார்..

மஞ்சுமோள், எப்போதுமே தன்னுடைய மாமியாரை இப்படித்தான் அடித்து கொடுமைப்படுத்துவாராம்.. இந்த வீடியோதான் 2 நாட்களாகவே இணையத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், மருமகளை திட்டி தீர்க்க துவங்கினர்.. அந்த பெண்ணின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரள போலீசாரை டேக் செய்து வலியுறுத்தினர்.

விசாரணை: உடனே கேரளா போலீசாரும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்ததுடன், நேரடியாகவே தாமஸ் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.. மஞ்சுமோளையும் தெக்கும்பாகம் போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.. எலியம்மாளை அங்கிருந்து மீட்டு, உடனடியாக மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சையும் தரப்பட்டது.

Kerala Police arrested School Teacher and what happened to her 80 year old Mother in law

மஞ்சுமோளுக்கு 37 வயதாகிறது.. இவர் ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. கெட்ட வார்த்தையில் திட்டி, நாற்காலியிருந்து கொடூரமாக தள்ளிய இந்த வீடியோவை எடுத்ததே, சொந்த மகன் தாமஸ்தானாம். தன்னுடைய அம்மாவை கொடுமைப்படுத்துவதை பலமுறை கண்டித்தும், மஞ்சுமோள் காதில் வாங்கவில்லையாம்.. தன்னுடைய மனைவியிடம், அம்மா படும் சித்ரவதையை பார்க்க முடியாமல்தான் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறுகிறார்.

அதிர்ச்சி: தற்போது, போலீஸ் ஸ்டேஷன் வந்து, மனைவி மீதும் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் அடிப்படையில், மஞ்சுமோள் மீது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் பிரிவு 24 மற்றும் ஐபிசி 308 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அகலவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+