பொன்னாரிடம் போலீஸ் முறையின்றி நடந்து கொண்டது.. கேரள பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!
கேரள போலீஸ் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முறையின்றி நடந்து கொண்டதாக கேரளா பாஜக தெரிவித்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரள போலீஸ் பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முறையின்றி நடந்து கொண்டதாக கேரளா பாஜக தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவில் நடை திறந்து இருப்பதையொட்டி அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று சபரிமலை கோவிலுக்குள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல முயன்றார்.

ஆனால் சபரிமலை கோவிலுக்குள் அவர் தொண்டர்களுடன் செல்ல முயன்றதால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கடைசியாக அவர் தனியாக கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை நோக்கி அனுப்பப்பட்டார்.
பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் அரசு பேருந்தில் அனுப்பப்பட்டது பாஜக கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கேரள போலீஸ், பொன்.ராதாகிருஷ்ணனிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவரை போலீஸ் முறையின்றி கையாண்டது என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. கேரள போலீஸ் அவரிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டதாக கேரளா பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
மேலும் கேரள போலீஸ் இப்படித்தான் பாகுபாடுடன் நடந்து கொள்கிறது. கேரள போலீசின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் தெரிந்துவிட்டது என்றும் கூறியுள்ளது. கேரள போலீஸ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இடையே நடந்த பேச்சுவார்த்தை இன்று பெரிய விவாதம் ஆனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications