இம்மியளவும் குறையல.. கேரளாவில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 55 ஆயிரத்தை கடந்த தொற்று
கேரளாவில் ஒரே நாளில் தொற்று பாதிப்பு 55 ஆயிரத்தை தாண்டி சென்றுள்ளது
திருவனந்தபுரம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 55,474 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, கேரளாவில் கலக்கத்தை தந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாமல் உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது.. இந்தியாவிலேயே டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் கொஞ்சம் குறைய தொடங்கியுள்ளது, ஓரளவு நிம்மதியை தந்து வருகிறது..

சுகாதாரத்துறை
இந்தியாவில் நேற்று 3.33 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,43,495 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,68,04,145 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதிர்ச்சி
இதனிடையே, கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் உயர்ந்தபடியே செல்கிறது... அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. குறிப்பாக, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகி உள்ளது.

உயிரிழப்பு
இதனையடுத்து கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.25 லட்சமாக உயர்ந்துள்ளது... அதேபோல, கொரோனாவைரஸ் தாக்கி ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.. இதுவரை 30,200 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்..
Recommended Video

சதவீதம் உயர்வு
ஆனால், இப்போதைக்கு 2.85 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. கேரளத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் நேர்மறை விகிதம் 49.40 சதவீதத்தைத் தொட்டுள்ளது... கொரோனா சோதனை செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.. அம்மாநிலத்தில் 84 சதவீத பேருக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications