இனி இவங்கதான்.. கேரள தலைமை செயலாளராக வேணு, போலீஸ் டிஜிபியாக ஷேக் தர்வேஸ் சாஹிப் நியமனம்
திருவனந்தபுரம்: கேரள மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபியை அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
கேரளாவில் 2 வது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பதவியேற்றவுடன் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டது.

இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி கேரள மாநில காவல்துறை தலைவர் பதவிக்கு தகுதியான 3 போலீஸ் அதிகாரிகளை கொண்ட பட்டியலை கேரள அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டம் கூட்டப்பட்டது.
அதில் கேரளாவில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த வி வேணுவை தலைமைச் செயலாளராகவும், கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவரான ஷேக் தர்வேஸ் சாஹிப் கேரள காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
த்திய பணியாளர் தேர்வு ஆணையம் டிஜிபி ரேங்கில் உள்ள கே.பத்மகுமார் மற்றும் ஹரினாத் மிஸ்ரா ஆகியோரது பெயரையும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்க பரிந்துரைத்து இருந்தது குறிபிடத்தக்கது. தற்போது நடைபெற்ற அமைச்சரவை கூட்டமே கேரள தலைமை செயலாளர் விபி ஜாயின் கடைசி கேபினட் கூட்டமாக பார்க்கப்படுகிறது.
வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் அவர் ஓய்வுபெற உள்ளார். இதற்கு முன் கேரளா முதலமைச்சர் வெளிநாட்டு சுற்று பயணத்தில் இருந்ததாலும், அதன் பின்னர் ஓய்வில் இருந்து வந்ததாலும் இதற்கு முன் நடைபெற்ற 3 கேபினட் கூட்டங்களும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தன. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் தலைமை செயலாளர் ஜாய் ஓய்வுபெறுவதன் காரணமாக முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த கேபினட் கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள விரும்பி இருக்கிறார். புதிய தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை டிஜிபியை முதலமைச்சரே தேர்வு செய்ய முடியும் என்றாலும், கேபினட் கூட்டத்தை கூட்டி முடிவு செய்யவே பினராயி விஜயன் விரும்பியுள்ளார்.
கேரளா மாநிலத்துடன் 2019 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த தமிழ்நாட்டில் திமுக வென்று ஆட்சியை பிடித்த நிலையில் தலைமைச் செயலாளராக இறையன்புவும், காவல்துறை டிஜிபியாக சைலேந்திர பாபுவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களும் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், இந்த பதவிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications