விபத்தில் இறந்தும் பலருக்கு வாழ்வு தந்த மாணவன்.. டாப் ரேங்கில் தேர்ச்சி.. கண்ணீருடன் கைதட்டிய அம்மா
திருவனந்தபுரம்: கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்து பலருக்கு வாழ்வளித்த 10ம் வகுப்பு மாணவன் சாரங், டாப் ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். சிறுவனின் கண்கள், இதயம், கல்லீரல், எலும்பு மஞ்ஜை உள்பட பல உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவின் ஆட்டிங்கல் பகுதியில் ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் பி.ஆர்.சாரங் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரங் உயிரிழந்தார். சாரங் உயிரிழந்த போதும் கண்கள், இதயம், கல்லீரல், எலும்பு மஞ்ஜை உடல் உறுப்புகளை அளித்து ஆறு பேருக்கும் புதிய வாழ்வை அளித்தார். உடல் உறுப்பு தானம் மூலம் பல பேருக்கு தானம் அளித்த மாணவன் சாரங் 10ம் வகுப்பு தேர்வில் ஏ பிளஸ் கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை கேட்டு அவரது பெற்றோர் கண் கலங்கினர்.

இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை வெளியிட்ட கேரள கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி மாணவர் சாரங்கு குறித்து உணர்ச்சிகரமாக பேசினார். சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவர் சாரங்கின் , பெரிய சாதனையை பகிர்ந்து கொண்ட அமைச்சரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.சாரங் எல்லாப் பாடங்களிலும் A+ கிரேட் பெற்றிருப்பதை வெளிப்படுத்திய சிவன்குட்டியின் குரல் நடுங்கியது.
அப்போது அமைச்சர் சிவன்குட்டி கூறும் போது, "சாரங் ஒரு நல்ல கால்பந்து வீரர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்த அவரது குடும்பத்தினரை நான் பாராட்ட விரும்புகிறேன். அவரது முடிவை இங்கே அறிவிக்கிறேன். அவனது பதிவு எண் 122913. அவனது எண்ணை அவனுடைய தந்தையிடம் இருந்து சேகரித்து வைத்திருந்தேன்," என்றார்.
இதனிடையே மகனின் சாதனையை கேட்டு அவரது தாய் ரஜனி தனது மகனின் சாதனைக்காக திடீரென கைதட்டினார். விபத்தின் போது அவருடன் பயணித்த அவரது தாயார் கதறி அழுததால், சாரங்கின் உறவினர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜும் சாரங்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்ததற்காக அவரது குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
சாரங்கின் பெற்றோர் பினீஷ் குமார் மற்றும் ரஜனி, தங்கள் மகனின் அகால மரணத்தை எண்ணி ஒரு பக்கம் வேதனையில் இருந்தாலும், மறுபக்கம் உடல் உறுப்புக்கள் தானம் மூலம் பல உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பை எண்ணி ஆறுதல் அடைந்தனர்.

சாரங்கின் உடல் வெள்ளிக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று மாலையே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications