Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரவையில் மீண்டும் இடம் கிடைக்காதது வருத்தமா?.. இதுக்கு ஷைலஜா டீச்சரின் செம பதிலை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை ஒரு கூட்டு அமைப்பு என்றும் தனிப்பட்ட நபரை நம்பி இல்லை என்றும் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

எல்.டி.எஃப் அரசு

எல்.டி.எஃப் அரசு

கேரள முதல்வராக பினராயி விஜயன் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்) அரசின் அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. முதல்வர் பினராயி விஜயனை தவிர பழைய அமைச்சர்கள் யாருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

மொத்தம் வெளியிடப்பட்ட 21 அமைச்சர்கள் பட்டியலில் அனைவரும் புதுமுகங்கள்தான். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான். ஏனெனில் நிபா வைரஸ், கொரோனா வைரஸ் காலங்களில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் ஷைலஜா.

ஷைலஜா டீச்சருக்கு இடமில்லை

ஷைலஜா டீச்சருக்கு இடமில்லை

கொரோனா முதல் அலையில் கேரளா சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை உலக அளவில் பாராட்டை பெற்றது. ஏன் ஐ.நா. அமைப்பே பாராட்டுக்கும் அளவுக்கு கேரள சுகாதாரத்துறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றார் ஷைலஜா டீச்சர். இதனால் அவர்தான் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பார் என்று அனைவரும் கருதி வந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றத்தை அளித்தது.

திருப்தி அடைகிறேன்

திருப்தி அடைகிறேன்

பழையவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற இடதுசாரிகள் கட்சியின் விதிமுறை காரணமாக ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கேரள அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்காதது குறித்து ஷைலஜா டீச்சரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அரசின் முடிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா? என்று கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- கட்சியுடன் முடிவை முழு மனதாக ஏற்கிறேன். கட்சி என்னை அமைச்சராக நியமித்தது. ஒரு அமைச்சராக, எனது கடமைகளை திருப்தியுடன் முடித்துள்ளேன். அடைகிறேன். எனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

தனி நபரை நம்பியல்ல

தனி நபரை நம்பியல்ல

புதிய அமைச்சரவைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். புதிய அமைச்சரவை அணி மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும். அவர்களால் மாநிலத்தில் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். அமைச்சரவையிலிருந்து நான் வெளியேறுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஏனெனில் கேரள சுகாதாரத்துறை ஒரு தனிநபரை மட்டும் நம்பி அல்ல. இது ஒரு முழுமையான அமைப்பாகும். என்னைத் தவிர, முதலமைச்சர் தலைமையிலான ஒரு பெரிய குழுவே மாநிலத்தில் கொரோனா தடுப்பைக் கையாண்டது' என்று கூறினார் ஷைலஜா டீச்சர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+