Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் முறையாக மலர்ந்தது தாமரை.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக.. கம்யூ - காங் பேரிடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநகராட்சி இடதுசாரிகளின் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக பாஜக வசமாகி உள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இந்த ஆளும் கூட்டணிக்கு எல்டிஎப் என்று அழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு யூடிஎப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ldf-vs-udf-vs-nda-who-will-win-thiruvananthapuram-corportation-election-details-here

அதேபோல் கேரளாவில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் முனைப்பில் பாஜகவும் செயல்பட்டு வருகிறது. பாஜக என்டிஏ கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. கேரளாவில் கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மாநகராட்சியில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை முதலே பாஜகவினர் அதிகமான வார்டுகளில் முன்னிலை வகிக்க தொடங்கினர்.

மாலை 3 மணியளவில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் முழு ரிசல்ட் வெளியானது. திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 50 வார்டுகளில் வெற்றி பெற்றனர். ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் மெஜாரிட்டிக்கு 51 வார்டுகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு இடம் தேவையாக உள்ள நிலையில் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணியின்றி பிற கட்சிகளில் போட்டியிட்டு வென்ற 2 பேரின் ஆதரவை பாஜக பெற்று மாநகராட்சியை கைப்பற்றுகிறது. 2020 தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை இடதுசாரிகளின் கூட்டணி கைப்பற்றிய நிலையில் இப்போது அதனை பாஜகவிடம் இழந்துள்ளது.

இங்கு எல்டிஎஃப் கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 70 வார்டுகளில், இந்திய கம்யூனிஸ்ட் 17 வார்டுகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்), ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் தலா 3 வார்டுகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 2 வார்டுகளிலும், இந்திய தேசிய லீக், மதசார்பற்ற காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (பி), ஜனதிபாத்யா கேரளா காங்கிரஸ், என்சிபி (சரத்பவார் அணி), ஜனதிபாத்யா சம்ரக்ஷனா சமிதி உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும் களமிறங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் யுடிஎஃப் கூட்டணியை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சி 88 வார்டுகளில் களமிறங்கி உள்ளது. கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி 5 வார்டுகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி 4 வார்டுகளில், கேரளா காங்கிரஸ் மற்றும் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தலா 2 வார்டுகளிலும் போட்டியிட்டது. மாறாக பாஜக கூட்டணியை எடுத்து கொண்டால் பாஜக 96 வார்டுகளில் களமிறங்கி உள்ளது. பாரத் தர்மா ஜனசேனா கட்சிக்கு 3 வார்டுகளும், கேரளா காமராஜ் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு தலா ஒரு வார்டுகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+