Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகரஜோதி தரிசனம்: ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசித்த பக்தர்கள்.. விண்ணை முட்டிய சரண கோஷம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபாரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது.

சபரிமலை மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறவுள்ளது. தரிசனத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இன்றும், நாளையும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

sabarimalai devottes

நாளை காலை 7 மணி முதல் நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்குமேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சபரிமலை மகரஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஜனவரி 13 ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், 14 ஆம் தேதி 40 ஆயிரமாகவும், 15 ஆம் தேதி 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் ஜனவரி 14 ஆம் தேதி, மகர சங்கம பூஜையும், பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரணங்கள் சார்த்திய ஐயப்பனுக்கு மகா தீபாரதனையும் நடைபெறவுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் 1,800 போலீஸாரும், பம்பையில் 800 போலீஸாரும், நிலக்கல்லில் 700 போலீஸாரும், இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,050 பேரும், கோட்டயத்தில் 650 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். இதனைக் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக திருவாபரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

பகல் 12:30 மணியளவில் திருவாபரண பவனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. பேழைகள் அடைக்கப்பட்டு கோவிலில் உச்ச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பந்தளம் ராஜ பிரதிநிதி ராஜராஜ வர்மாவுக்கு உடைவாள் வழங்கப்பட்டது. திருவாபரண பேழைகள் கங்காதரன் குருசாமி குழுவினரின் தலையில் ஏற்றப்பட்டது.

ஆபரண பேழைகள் வெளிவந்தபோது ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் சரண கோஷமிட்டனர். தொடர்ந்து, திருவாபரண பவனி புறப்பட்டது. சுத்தி கிரியைகள் நேற்று சன்னிதானத்தில் தொடங்கியது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் சுத்திகிரியை பூஜைகளை நடத்தினார். இன்று மதியம் உச்ச பூஜைக்கு முன்னால் பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+