தமிழ் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார்.. பரபரப்பை கிளப்பிய மலையாள நடிகை ரேவதி! அடுத்த ஷாக்
திருவனந்தபுரம்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
தற்போது மொத்த மலையாள திரையுலகமே அதிர்ந்து போய் நிற்கிறது. சினிமா துறையில் பாலியல் தொல்லை, அட்ஜெட்ஸ்ட்மெண்ட் தொடர்பான புகார்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. வாய்ப்பு வழங்குவதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நடிகைகள் அழைக்கப்படுவதாக பல நடிகைகள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கு மலையாள திரையுலகமும் விதிவிலக்கல்ல. மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தியது. இந்த கமிஷன் அறிக்கை அரசிடம் கடந்த 2019ல் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கையில் உள்ள விபரங்கள் வெளியாகி அதிர வைத்து வருகின்றன.
அந்த அறிக்கையில், ‛‛மலையாள திரையுலகம் ஒரு 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருக்கிறது. அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிக முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது'' எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்த ஐஜி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மலையாள நடிகை ரேவதி சித்திக், மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை நேற்று முன்வைத்தார். இதையடுத்து சித்திக் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சித்திக் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ரேவதி நடிகர் ரியாஸ் கான் மீது புகார் அளித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரியாஸ் கான் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருப்பார். அதேபோல் வின்னர் திரைப்படத்தில் இவர் ‛பாடிபில்டர்' ஆக கட்டத்துரை என்ற பெயரில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்நிலையில் தான் ரியாஸ் கான் மீது நடிகை ரேவதி சித்திக் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவதி சித்திக் கூறுகையில், ‛‛போட்டோகிராபர் ஒருவர் மூலம் எனது செல்போன் எண்ணை ரியாஸ் கான் வாங்கி உள்ளார். அதன்பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொண்டார். அதற்கு மறுத்ததால் தனக்கு அவரது தோழிகளை அறிமுகம் செய்து வைக்கும்படி கேட்டு கொண்டார். செல்போனில் அவர் ஆபாசமாக பேசி உள்ளார்'' என்றார்.
மேலும் சித்திக் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ரேவதி சம்பத் கூறுகையில், ‛‛சித்திக்கை திரைத்துறையில் இருந்தே ஓரம் கட்ட வேண்டும். கேரள அரசு பாதுகாப்பு அளித்தால் சித்திக்கிற்கு எதிராக புகார் அளிக்க முன்வருவேன். கேரளா திரையுலகில் பாலியல் தொல்லையால் நடிகைகள் பாதிக்கப்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications