ஐயப்பனை காண குவியும் பக்தர்கள்..சன்னிதானமே திணறுது! திருப்பதி ரூட்டை கையிலெடுத்த தேவஸ்தான அதிகாரிகள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து திருப்பதி போல பக்தர்களை குழுவாக நிறுத்தி வைத்து தரிசனத்திற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
கேரளாவின் சபரிமலையில் குடி கொண்டிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கை தொட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கி நிறைவு பெற்றது.

இந்த நிலையில் தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக டிசம்பர் 30-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை பக்தர்கள் கூட்டம்:
தினமும் அதிகாலையில் இருந்து பகல் ஒரு மணி வரையிலும், மூன்று மணி முதல் 11 மணி வரையிலும் என 18 மணி நேரம் நடை திறக்கப்படுகிறது. தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். ஏற்கனவே ஆன்லைன் புக்கிங் மூலம் பதிவு செய்தவர்கள் 70 ஆயிரம் பேரும், எரிமேலி பம்பை ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்கள் 20,000 பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தடுத்து நிறுத்தப்படும் பக்தர்கள்:
இந்த நிலையில் இந்த ஆண்டு சீசன் நிறைவடைய இருக்கும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது, இதன் காரணமாக பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்படும் பக்தர்கள் அதற்கு பிறகு கன்னிமூல கணபதி கோவில் அருகே சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மலைப்பாதையில் செங்குத்தாக ஏறும் பக்தர்கள் அப்பாச்சி மேடு பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

மணிக்கணக்கில் காத்திருப்பு:
நீலிமலை, அப்பாச்சி மேடு டாப், மரப்பாலம், சரங்குத்தி ஆகிய பகுதிகளில் குழு குழுவாக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிக நெருக்கமாக மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடைப்பை திறந்த உடன் வேகமாக ஓடிச் செல்லும் பக்தர்களால் குழந்தைகள் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் சுமார் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பெருவழிப்பாதை பயணம்:
மேலும் மலைப்பாதையில் பயணிக்கும் போது அடைக்கப்படும் பக்தர்கள் கம்பிவேலிகளுக்குள் இருக்கும் நிலை இருக்கிறது. அங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாதது பக்தர்களை சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கிடையே எரிமேலியிலிருந்து கன்னி சாமிகள் உடன் பேட்டை துள்ளி பெருவழிப்பாதையில் அழுதா நதி, அழுதா மழை, முக்குழி, கரிமலை, பெரியானை வட்டம், சிறுயானை வட்டம் ஆகிய பகுதிகளை கடந்து வரும் பக்தர்கள் பம்பையில் நீராடி சபரிமலை செல்கின்றனர்.
சிறப்பு டோக்கன் ரத்து:
சுமார் 60 கிலோ மீட்டர் பெருவழி பாதையில் வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை சிறப்பு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சாதாரண வரிசையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல கிலோமீட்டர் பயணம் செய்து வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பக்தர்கள் கோரிக்கை:
குறிப்பாக 18 படி ஏறுவதற்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது சன்னிதானத்தில் இருந்து குழு குழுவாக பக்தர்கள் 18 படி ஏற அனுமதிக்கப்படும் நிலையில் ஆழிக் குண்டம் அருகில் இருந்து 18 படி ஏறுவதற்கே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 18 படி ஏறிய பின் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலையில், 18 படி ஏறிய உடனே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications