மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு.. சவாலான சூழலில் 5வது நாளாக மீட்பு பணி
திருவனந்தபுரம்: மூணாறில் நிலச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
மூணாறு, ராஜமலை பகுதியில் கடந்த 7ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் சுமார் 80 பேர் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை காவல் துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் இணைந்து மீட்பு பணிகளை துவங்கியுள்ளனர். நேற்றுவரை 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று காலை, மேலும் 1 உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. எனவே, பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

மூணாறில் அவ்வப்போது கடுமையான மழை பொழிவு இருப்பதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் மீட்பு பணிகள் தாமதமாகின்றன. மேலும் மாலை சூரிய வெளிச்சம் குறைந்த பிறகு மீட்பு பணிகள் நடை பெறுவது கிடையாது. சூரிய வெளிச்சம் இருக்கும்போது மட்டும்தான் நடைபெறுவதும் தாமதத்துக்கு காரணம்.
இந்த நிலச்சரிவு விபத்தில் சிக்கி உள்ளவர்களில் பெரும்பாலானவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது .அவர்களது உறவினர்கள் மூணாறு சென்று தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் உயிரோடு மீட்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பில் சோகத்தோடு காத்திருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications