கொத்து கொத்தாய்.. 9,000 வாத்துகள் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ஆலப்புழா.. மீண்டும் பறவை காய்ச்சலா?
கேரளாவில் 9 ஆயிரம் வாத்துகள் உயிரிழந்துள்ளன
திருவனந்தபுரம்: ஏற்கனவே கொரோனா தொற்று கலக்கத்தில் கேரள மாநிலம் சிக்கி வரும் நிலையில், 9 ஆயிரம் வாத்துக்கள் திடீர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய மாநிலங்களில் கேரளா ஆகும்.. அங்கு கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை.
எனினும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4723 ஆக உள்ளது.. அதேபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 5370 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை
இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 40,132 என்றும், இன்று ஒரே நாளில் டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,524 என்றும் கூறப்படுகிறது.. இப்போதைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 43,663 ஆக உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கி வருகிறது.

கேரளா
இந்நிலையில், நோரோ, ஜிகல்லா உள்பட சில வைரஸ் நோய்களும் கேரளாவில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.. கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியது... இதற்கான தடுப்பு நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டுவரும்போதே, ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவியது.

வாத்து பண்ணைகள்
இப்போது மறுபடியும் பறவை காய்ச்சல் வந்துள்ளதோ என்ற கலக்கம் சூழ்ந்துள்ளது.. காரணம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வாத்து பண்ணைகள் உள்ளன.. அந்த வகையில் ஆலப்புழா அருகே அம்பலப்புழாவில் ஜோசப் என்பவர் வாத்து பண்ணை வைத்துள்ளார்... இந்த பண்ணையில் கடந்த சில நாட்களாக வாத்துகள் திடீர் திடீரென செத்து விழுந்துள்ளன.. இந்த 3 நாட்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்தன.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப், இதுகுறித்து திருவல்லாவில் உள்ள பறவைகள் நோய் சிகிச்சை மையத்திற்கு தகவல் தந்தார்.. உடனே டாக்டர்கள் சம்பந்தப்பட்ட வாத்து பண்ணைக்கு வந்து, இறந்த வாத்துகளின் ரத்த மாதிரியை சேகரித்து, திருவனந்தபுரத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

டெஸ்ட்கள்
இதன் முடிவுகள் வந்தால்தான் வாத்துகள் இறப்புக்கு காரணம் தெரியும்? ஒருவேளை பறவை காய்ச்சல்தான் காரணமா என்றும் தெரியவரும்.. அதுமட்டுமல்ல, அந்த வாத்து பண்ணையில் உள்ள மற்ற வாத்துகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. கடந்த வருடமும், இவரது இதே பண்ணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள், பறவை காய்ச்சல் நோய் பாதித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications