மேலும் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு.. அலறும் கேரளா! தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த வைரஸ் பாதிப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலர் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், உயிரிழந்தவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல கடந்த ஜூலை மாதத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சுறுத்தல் மேலெழுந்தது. மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை கேரளாவில் உள்ள ஆய்வகங்கள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகம் ஆகியவை உறுதி செய்திருந்தன.
அதேபோல கடந்த 16ம் தேதி மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், திடீரென உயிரிழந்தார். அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டதில், அவர் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த தொடர் உயிரிழப்புகள் கேரளாவில் நிபா வைரஸ் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.
எனவே, நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனுடன், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அங்கு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறவை அல்லது விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும், காய்கறிகளை நன்கு சுத்தப்படுத்தியபின் சமைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் சோதனையில் மேலும் இருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications