தமிழ்நாடு மட்டும் இன்றி.. கேரளா, தெலுங்கானா, கர்நாடகாவிலும் நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை
திருவனந்தபுரம்: தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்த தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தமிழகத்தில் மட்டும் இன்றி பக்கத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும், அவருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்கள் என தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனை பக்கத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. கேரளா, தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சர் வருமான வரித்துறைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத், பெங்களூரு, பாலக்காட்டில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையில் சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications