போர்க்களமான சபரிமலை போராட்டம்.. கார்கள் மீது கல்வீச்சு.. போலீஸ் திணறல்.. பலர் கைது!
கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை பெண்கள் கோவிலுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு எதிராக மக்கள் பலர் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது. சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது.
அந்த பகுதியில்தான் போராட்டக்காரர்கள் கூடி நிற்கிறார்கள். அங்கிருந்துதான் மலைக்கு செல்ல வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கேயே பெண்களை மறித்து போராடி வருகிறார்கள். அந்த பகுதிக்கு பின் பெண்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இந்த போராட்டம் காலையில் கலவரமாக மாறியது.
இதன் காரணமாக போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பல கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்த பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
முன்னாள் சபரிமலை தேவசம் போர்ட் தலைவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் பல பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications