கேரளா படகு விபத்து.. வேதனை தெரிவித்த பிரதமர் மோடி.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி!
மலப்புரம் : கேரளாவில் ஏற்பட்ட கோர படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்ததில் தற்போது வரை 21 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீரில் மூழ்கியவர்களை தேடும் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாலை 6.30 மணி அளவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 21 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 குழந்தைகள் அடங்குவர்.
Recommended Video
இந்த படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களை காக்க முடியவில்லை என படகில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஷஃபிக் தெரிவித்துள்ளார்.
மீட்பு படையினருடன் உள்ளூர் மீனவர்களும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரியாஸ்கான் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளா படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications