மலையாள திரையுலகை விடாத பாலியல் புகார்! நடிகை குறித்து அவதூறு.. ’லப்பர் பந்து' ஸ்வாசிகா மீது வழக்கு!
திருவனந்தபுரம்: மலையாளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து முன்னணி நடிகர்களான எடவேல பாபு, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை கூறியதாக லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள திரை உலகில் ஒரு 'பவர் குரூப்' ஒட்டுமொத்த திரையுலகை கட்டி ஆள்வதாகவும், நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கைது செயப்பட்ட சிலர் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் புகாரினை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கையை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது.
பல நடிகைகளுக்கு, நடிகர்களும் ,இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியண்ணன் பிள்ளை, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இது மட்டுமல்லாமல் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் அத்துமீறியதாக ஆலுவாவை சேர்ந்த நடிகை ஒருவர், எடவேல பாபு, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா, ஜாஃபர் இடுக்கி மற்றும் நடிகரும் இயக்குனருமான பாலச்சந்திர மேனன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆலுவாவைச் சேர்ந்த புகார் அளித்த நடிகை குறித்து அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவதூறாக பேசினார். பட வாய்ப்பு தருவதாக தன்னையும் நடிகர்களிடம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என அவர் பேசியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த நடிகை குறித்து லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் யூட்யூப் சேனல் பேட்டி ஒன்றில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தன்னைக் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக பீனா ஆண்டனியும், இரண்டாவது குற்றவாளியாக மனோஜூம், மூன்றாவது குற்றவாளியாக ஸ்வாசிகாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications