விழிஞ்சத்தில் நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்.. நாட்டுக்காக அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் ரூ. 8,867 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச துறைமுகத்தின் தொடக்க விழா நடைபெற்ற. இந்த துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு விழிஞ்சத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் இணைந்து ரூ. 8,867 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், விழிஞ்சம் துறைமுகத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தானியங்கி துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் திருவனந்தபுரம் வந்தடைந்தார். கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி தங்க வைக்கப்பட்டிருந்தார்.
விழாவையொட்டி, எம்எஸ்சி நிறுவனத்தின் செலஸ்டீனோ மரெஸ்கா எனும் மிகப்பெரிய கப்பல் விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்சத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழிஞ்சம் துறைமுகத்தின் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்சம் சென்றடைந்தார்.
இந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications