பிரமாண்ட பேரணி.. வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி!
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி இந்த தொகுதியின் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்று எம்பியானார். இதனை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வயநாடு+ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று எம்பியானார். ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே எம்பியாக இருக்க முடியும் என்பது விதி. எனவே, வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

ராஜினாமா அறிவிப்பு வந்த உடனேயே பிரியங்கா காந்தியை இந்த தொகுதியில் நிறுத்துவது என்று கட்சி தலைமை முடிவு செய்தது. அதன்படி, பிரியங்கா காந்தி இந்த தொகுதியின் வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
ராகுல் காந்தி எம்பியாக போட்டியிட்டபோது, வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். எனவே, இந்த தொகுதிக்கு ஏற்கெனவே பரிட்சயமானவராக பிரியங்கா இருக்கிறார். மட்டுமல்லாது இந்த தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால், பிரியங்கா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
அரசியல் நிகழ்வுகளில் பிரியங்கா பங்கேற்றிருந்தாலும், தேர்தல் அரசியலில் அவர் நுழைவது இதுவே முதன்முறையாகும். அந்த வகையில் இன்று பிரியங்கா காந்தி வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு நவ.28ம் தேதி அறிவிப்பாகிறது.
பிரியங்காவை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் களமிறக்கப்படுகிறார். வயநாடு தொகுதி காங்கிரஸ் எப்போதும் ஒரு ஆப்ஷனாகவே வைத்திருப்பதாக பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பாஜக மட்டுமல்லாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டி உருவாகியுள்ளது. இந்த முறை யு.ஆர். பிரதீப் சிபிஐ சார்பில் போட்டியிடுகிறார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications