கல்யாண மாலை கொண்டாடும் தங்க மங்கை.. கணவருக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய பி.டி.உஷா!
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா தனது 30 வது திருமண ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை (25.04.2021) அன்று கொண்டாடினார்.
அதையொட்டி தனது கணவரை தன்னுடைய வெற்றிக்கு "பின்னால் இருப்பவர்" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.இந்த டீவீட்டுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

பி.டி. உஷாவின் ட்வீட்
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதை நாம் எப்போதும் கேள்விப்படுகிறோம். இன்று எனது எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் இருக்கும் மனிதனைப் பாராட்டுகிறேன்! சரியான ரிலே அணியை ஒரு ஸ்பிரிண்டிற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் மராத்தானுக்கும் போதுமானதாக மாற்றியமைக்கு நன்றி! 30 ஆண்டுகால ஒற்றுமையைக் கொண்டாடுகிறேன்! "என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்

பிறப்பு
பி. டி. உஷா என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் "பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா" அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள "பய்யோலி" என்ற இடத்தில் பைத்தல் என்பவருக்கும், இலட்சுக்கும் மகளாகப் பிறந்தார்.

தங்க மங்கை
1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக விளங்கியவர். இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் படைக்கவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்ததால் இவர் "இந்திய தடகளங்களின் அரசி" எனவும், 'இந்தியாவின் தங்க மங்கை' எனவும், "பய்யொலி எக்ஸ்பிரஸ்" எனவும் வர்ணிக்கப்படுகிறார்.

இல்லற வாழ்க்கை
சுமார் 28 வயது வரை விளையாட்டு மட்டுமே வாழ்க்கைத் துணை என்று பயணித்த பி. டி. உஷா அவர்கள், 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பிறகு, சுமார் 3 ஆண்டுகள் விளையாட்டில் பங்கேற்காமல் இருந்த அவர், தன்னுடைய கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.

பி.டி.உஷா பெற்ற பட்டங்கள்
சுமார் 20 ஆண்டுகளாகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பல சாதனைகளைப் படைத்து, இந்திய விளையாட்டுத் துறைக்கு அறிய பங்காற்றிய அவரை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு "பத்மஸ்ரீ" மற்றும் "அர்ஜுனா" விருதுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பணியையும் வழங்கி கௌரவித்தது.

ஓய்வு
காலில் தொடர்ந்து அவருக்கு வலி ஏற்பட்டதன் காரணமாக, ஓய்வு எடுத்துகொள்ள முடிவு செய்த அவர், ஜூலை 25, 2000-ல் தனது 36வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார் திருமதி பி.டி .உஷா அவர்கள்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications