கோவில் குளத்தில் கால் கழுவிய இஸ்லாமிய பெண்! சர்ச்சையான வீடியோ.. குருவாயூர் கோவில் எடுத்த முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் குளத்தில் இஸ்லாமிய பெண் விலாக்கர் ஒருவர் கால்களை கழுவியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து கோவிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு குளத்தை சுத்தப்படுத்துவதற்கான சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் கோவிலுக்கு இந்து மதத்தை சேராத ஜாஸ்மின் ஜாபர் என்பவர் சென்றார். சோசியல் மீடியாவில் மிகவும் பிலபலமானவர். அதுமட்டுமின்றி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.
கோவிலில் ஜாஸ்மின் ஜாபர் வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கோவில் குளத்துக்கு சென்ற அவர் கால்களை தண்ணீரில் வைத்து கழுவினார். அதுமட்டுமின்றி கைகளால் தண்ணீரில் வைத்து வீடியோ எடுத்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இது சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவை பார்த்தவர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜாஸ்மின் ஜாபர், இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை. இதனால் அவர் எப்படி கோவிலுக்கு சென்று புனித குளத்தில் வீடியோ எடுக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் குளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறினர். இதையடுத்து கோவில் மற்றும் குளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜாஸ்மின் ஜாபர் வந்து சென்றதால் தூய்மைப்படுத்துவதற்கான பூஜைகள் நடத்தப்பட்டது. இதற்காக இன்று காலை 5 மணி முதல் மதியம் வரை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications