செய்தியாளர்களே மைக்கை தூக்கிகிட்டு பேட்டி எடுக்க போறப்ப கவனமாக இருங்க.. கேரள முதல்வர் அறிவுரை
திருவனந்தபுரம்: மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேட்டி எடுக்கும் போது கவனமாக இருக்குமாறு செய்தியாளர்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.
Recommended Video
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாய் நீர் துளிகள், சளி, தும்மல் , இருமல் மற்றும் அவர் கையை வாய் , கண், மூக்கு பகுதிகளை தொட்டுவிட்டு பிற இடங்கள் ஆகிவற்றின் மூலம் கொரோனா பரவுகிறது,. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூச்சு காற்று நமது முகத்தில் பட்டாலும் அதன் மூலம் பரவும் ஆபத்து உள்ளது. அதாவது தொற்று நோய் போல் பரவும் ஆபத்து உள்ளது.

எனவே தான் அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 28 நாட்கள் வரை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் விலகியே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அச்சம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கொரோனா குறித்து நீங்கள் வெளியிட்டு வரும் விழிப்புணர்வு செய்திகள் பாராட்டும் வகையில் இருக்கிறது. நீங்கள் மருத்துவமனைக்கு உள்ளதாக சென்று ரிப்போர்ட் செய்யும் போது கவனமாக இருங்கள். கொரோனா பாதித்தவர்களை பேட்டி எடுப்பதை தவிர்த்துவிடுங்கள். மைக் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால் செய்தியாளர்கள் எச்சரிக்கை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சுமார் 22 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவல் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications