சசி தரூர் சிபிஎம் கட்சியில் ஐக்கியம்? கேரளாவில் காங்கிரஸுக்கு பெரிய இடி? அவரே சொன்ன பதிலை பாருங்க
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், திடீரென பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பாராட்டிப் பேசியுள்ளார். அவருக்குக் காங்கிரஸ் தலைமையுடன் மோதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் சசி தரூர், தான் மாற்று ஆப்ஷன்கள் குறித்தும் யோசித்து வருவதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் திருவனந்தபுரம் தொகுதியில் எம்பியாக இருக்கிறார். இவருக்கு கட்சியைத் தாண்டியும் மிடில் கிளாஸ் மக்களிடையே வரவேற்பு அதிகம் இருக்கிறது.

சசி தரூர்
அவர் சமீபத்தில் கேரள அரசின் கொள்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டியிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திருந்த நிலையில், அதை சசி தரூர் பாராட்டியிருந்தார். இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதற்கிடையே சமீபத்தில் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சசி தரூர் இது தொடர்பாகக் கூறுகையில், "என்னை நான் ஒருபோதும் குறுகிய அரசியல் சிந்தனைகள் கொண்ட தலைவராக நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி கேரளாவில் புதிய வாக்காளர்களை ஈர்க்க வேண்டும். தனது தளத்தை விரிவுபடுத்த வேண்டும்.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலமாகவே ஒரு வலுவான மாநில தலைவர் இல்லை. அது ஒரு பெரிய சிக்கல் தான். கேரளாவில் உள்ள பல காங்கிரஸ் தலைவர்கள் நான் கூறுவதை ஒப்புக்கொள்கிறார்கள். இங்கு வலிமையான தலைவர் தேவை.
கேரள காங்கிரஸ் தலைவர்
தனியார் அமைப்புகள் நடத்திய சர்வேக்களில் எனக்கு முன்னிலை இருப்பதாகக் கூறியுள்ளனர். மற்ற தலைவர்களைக் காட்டிலும் எனக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளனர். கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே இருக்கிறது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லை என்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருக்க வேண்டும்.
காங்கிரஸில் இருந்து விலகல்?
நான் காங்கிரஸ் கட்சிக்காகச் சேவையாற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன். ஆனால், காங்கிரஸுக்கு எனது சேவை தேவையில்லை என்றால் எனக்கு இருக்கும் வேறு ஆப்ஷன்கள் குறித்தும் நான் யோசிக்க வேண்டி இருக்கும். அதேநேரம் தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவுள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. சில விஷயங்களில் எனக்கும் தலைமைக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதற்காக நான் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் எனச் சொல்வதில் உண்மை இல்லை" என்றார்.
சசி தரூர் சமீபத்தில் தான் ராகுல் காந்தியை நேரில் சந்தித்திருந்தார். சுமார் 30 நிமிடங்கள் இரு தலைவர்களும் தனியாக ஆலோசித்தனர். அது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சசி தரூர், "ராகுல் காந்தி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. 30 நிமிடங்கள் இருவரும் ஆலோசித்தோம். நான் சில முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தேன். இது தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பு என்பதால் என்ன பேசினோம் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதேநேரம் தேர்தல் குறித்தோ கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் குறித்தோ நாங்கள் எதுவும் ஆலோசிக்கவில்லை" என்றார்.
என்ன காரணம்?
சமீபத்தில் சசி தரூர் எழுதிய கட்டுரையில் அவர் கேரள அரசை வெகுவாக பாராட்டி இருந்தார். கேரளாவை ஆளும் சிபிஎம் அரசு, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதாகவும் சொல்லிப் பாராட்டி இருந்தார். இதுவே பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது. கேரள காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் கருத்தை நிராகரித்த நிலையில், அவரையும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications