கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, லட்சத்தீவு மற்றும் அந்தமானில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். வழக்கமாக கேரள மாநிலத்தில் ஜூன் 1ம் தேதியோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தென்மேற்கு பருவமழை துவங்கி விடும். இந்த காலக்கட்டத்திற்குள் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் நிலவியது இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது
பின்னர் ஜூன் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கி விடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6ம் தேதியும் தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. பின்னர் இது குறித்து தகவல்தெரிவித்த வானிலை மையம், மேலும் 2 நாட்கள் தாமதமாக 8-ம் தேதி தான் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என அறிவித்திருந்தது. அதன் படி இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு முக்கிய நீராதாரத்தை தருவது இந்த தென்மேற்கு பருவமழை தான். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும்.
இந்நிலையில் நடப்பாண்டு வழக்கமாக பெய்யும் அதே அளவு பருவமழை தவறாமல் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. ஜூன் துவங்கி செப்டம்பர் வரை சராசரியாக இந்த 4 மாதங்களில், 203 சென்டி மீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 251 செ.மீ மழையை கொட்டித் தீர்த்தது.
இதனால் கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. இதனிடையே தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருவனந்தபுரம் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications