சுரேஷ் கோபி வந்துட்டாரு.. "சிவப்பு" மண்ணை துளைக்கும் காவி? ஒரே லிஸ்ட்டில கேரளா பாஜகவின் பெரிய ப்ளான்
திருவனந்தபுரம்: எதிர்பார்த்தபடியே பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட் வெளியாகி உள்ளது.. எதிர்பார்த்தபடியே திரிச்சூரின் பாஜக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், கேரளா அரசியலே பரபரத்து காணப்படுகிறது.
வடமாநிலங்களில் வலுவாக உள்ள பாஜக, தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பல வருடங்களாகவே முயன்று வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாட்டை போலவே, கேரளாவில் பாஜகவில் காலூன்ற முடியாத நிலைமை உள்ளது.

பிரபலங்கள்: எனவே, சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலமானவர்களுக்கு வலையை விரித்து, அதன்மூலம் மக்களின் வாக்குகளை அள்ள முயன்றது.. பாஜக விரித்த வலையில், பிரபல நடிகர்கள் பலர் வந்து விழுந்தனர்...
கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் இந்த வியூகம் ஓரளவு எடுபட்டதையடுத்து, அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது.. அதற்கு பிறகு, கேரள பாஜகவில் ஏராளமான நடிகர்கள் வலிய வந்து இணைய துவங்கினார்கள்.. ஆனாலும், இணைந்த வேகத்திலேயே, பாஜகவை விட்டு வெளியேறியும் சென்றுவிட்டனர். பலர் சென்றுவிட்டாலும், இன்னமும் பாஜகவுடன் இணக்கமான தொடர்பில் இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி.
என்ன காரணம்: காரணம், நாயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவரை தேர்தலில் முன்னிறுத்தி, நாயர் ஓட்டுக்களுக்கு குறி வைத்தது பாஜக.. எனவே, 2016 தேர்தலில் சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா சீட்டையும் வழங்கியது. ஆனால், சுரேஷ்கோபியால் மெஜாரிட்டி வாக்குகளை பெற முடியவில்லை.
கடந்த எம்பி தேர்தலிலும், திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபிக்கு சீட் தந்தும்கூட, தோல்வியையே தழுவினார்.. அதேபோல 2 வது இடத்தைகூட பெற முடியாமல், 3வது இடத்தை தக்க வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.. இதற்கு பிறகு, மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்நோக்கியிருந்தும், அந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், மேலிட பாஜகவுடன் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியை விட்டு வெளியேற போவதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதுமட்டுமல்ல, சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், பிரச்சாரங்களிலும் அவரை வலுவாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கணக்கு போடப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக, வரப்போகும் தேர்தலின்போது, சுரேஷ் கோபியை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கலாம் என்றும் பாஜக யோசித்துள்ளது.
சசிதரூர்: இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்பியாக உள்ளார். அடுத்த முறையும் அவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால், சுரேஷ் கோபியை களமிறக்கி வெற்றிக்கனியை பறிக்கலாம் என்றும் பாஜக நினைத்தது. .. இதையடுத்து, திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என்றும் செய்திகள் உலா வந்தன.
அதேபோல, சசிதரூருக்கு எதிராக நிர்மலா சீதாராமனை களமிறக்கவும் பாஜக இன்னொரு கணக்கு போட்டது.. நிர்மலா சீதாராமனுக்கு அடுத்தப்படியாக திருவனந்தபுரம் வேட்பாளராக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் அல்லது நடிகர் சுரேஷ் கோபி என்றெல்லாம் சாய்ஸ்கள் சலசலத்தன.
அபார வாக்கு வங்கி: இந்நிலையில், தற்போது, எதிர்பார்த்தபடியே, திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.. பாஜகவுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அபாரமான வாக்கு வங்கிகள் சுரேஷ் கோபிக்கு இல்லாவிட்டாலும்கூட, கணிசமான வாக்கு வங்கிகளை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் சுரேஷ் கோபி. இந்த நம்பிக்கையில் நாயர் ஓட்டுக்களை குறி வைத்து, மீண்டும் பாஜக தன்னுடைய காய்நகர்த்தலை கேரளாவில் ஆரம்பித்துள்ளது.
பிரபலங்கள்: வடமாநிலங்களில் பெரும்பாலும் பாஜகவுக்கு கை கொடுத்து உதவும் கவர்ச்சி அரசியல் தென்னகத்திலும் கை கொடுக்குமா? என்று தெரியவில்லை.. ஆனால், மக்களின் ஓட்டுக்களை பெறவேண்டுமானால், பிரபலங்களை களமிறக்குவதையும் தாண்டி, வேறு சில விஷயங்களும் தொகுதி மக்களுக்கு தேவையாக இருக்கிறது. அந்தவகையில், "சிவப்பு" மண்ணான கம்யூனிஸ கேரளாவில் "காவி"யின் நிறம் இனியாவது எடுபடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications