"சர்ப்ரைஸ்".. மோடியை மொத்த கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.. மாற்றம் வரப்போகுது.. பாஜக சுரேந்திரன் நச்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி மற்றும் அவரது நிர்வாகம் மீது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் நம்பிக்கை கொண்டிருப்பதாக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் பூரித்து கூறியுள்ளார்.
கேரளாவில் வலுவான வாக்கு சதவீதத்தை பெற பாஜக முயன்று கொண்டிருக்கிறது.. குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகளையும் பிரதானமாக குறி வைத்து களமிறங்கி உள்ளது.
அந்தவகையில், ஈஸ்டர் சன்டே நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஒரு இடத்தை பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா பாஜகவின் முக்கிய தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளையும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ மக்கனை சந்திக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

இயேசு போட்டோக்கள்: அதாவது, பிரதமர் மோடியின் உத்தரவின்படி, ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பல பாஜக தலைவர்கள் சென்றிருக்கிறார்கள்.. பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், பிரதமர் மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட பாஜகவினர், சோஷியல்மீடியாவில் பாஜகவின் பல்வேறு அதிகாரப்பூர்வ பக்கங்களில், உயிர்த்தெழுந்த இயேசுவின் படங்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகளால் தொடர்பான பதிவுகளையும் ஷேர் செய்து வருகிறார்கள்..
மேஜர் ரோல்: இதில் முக்கிய ரோல் வகிப்பது, கேரளா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் என்பதுதான் ஹைலைட் சமாச்சாரமே.. இவர் தன்னுடைய சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் 2 பிஷப்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. மேலும், மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் திருவனந்தபுரம் பேராயத் தலைவர் தாமஸ் ஜே நெட்டோவுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.. பாஜகவின் இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சுரேந்திரன் பூரித்து சொல்கிறார்.
ஹேப்பி சுரேந்திரன்: பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தொடர்ந்து சொல்லும்போது, "கிறிஸ்தவ மதத் தலைவர்களிடம் மட்டுமின்றி, சாதாரண கிறிஸ்தவர்களிடமும் கட்சி மீதான அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மற்றும் அவரது நிர்வாகம் மீது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் நம்பிக்கை கொண்டிருப்பதாக பாஜகவினர் கருதுகின்றனர்.. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களிலும், கோவாவிலும் நல்லாட்சி நடப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். எங்கும் வரலாறு காணாத வளர்ச்சி காணப்படுகிறது. இந்த வளர்ச்சி கேரளாவிலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றால், மோடியின் தலைமையும், பாஜக ஆட்சியும் இங்கு தேவை என்பதை கிறிஸ்தவர்கள் உணரத் தொடங்கி விட்டனர்" என்று கூறினார்.
இதனிடையே, கேரள பாஜகவும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "பிரதமர் மோடியின் நிர்வாகச் சிறப்பிற்கு எல்லா இடங்களிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்பு பாஜகவுக்கு திரிபுராவில் ஒரு சதவீத வாக்கு மட்டுமே இருந்தது, இப்போது ஆட்சியில் உள்ளோம். அதனால், 15 சதவீத வாக்குகள் வரை பெற்ற கேரளாவிலும் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தலாம். நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா?












Click it and Unblock the Notifications