Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆற்றுக்கு வழி காட்டிய "கூகுள் மேப்" இரவில் திடீரென வந்த அலறல் சத்தம்.. கேரளாவில் 2 பேர் பலியான சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கூகுள் மேப்சை நம்பி காரில் சென்று கொண்டிருந்தவர் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு டூர் வந்த ஆண் - பெண் இருவரும் கூகுள் மேப்சை நம்பி சென்றுள்ளனர். ஆற்றுப்பாதையில் கூகுள் மேப்ஸ் வழி காட்டியதில் அதனை நம்பி சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் குமரகோம் அருகே உள்ள கைப்புழமுட்டுவில் ஆற்று நீரில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் பலியனார்கள். கூகுள் மேப்ஸ் பார்த்து காரை ஓட்டியதால் இந்த விபரீத விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: -

google maps kerala tour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சாயேலி ராஜேந்திர சர்ஜே என்ற பெண்ணும் ஜேம்ஸ் ஜார் (வயது 48) என்பவரும் குமரகோம் பகுதியில் உள்ள படகு விடுதியில் சுற்றுலா சென்று விட்டு காரில் கோட்டயம் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். கோட்டயம் செல்வதற்கு வழி தெரியாததால், கூகுள் மேப்ஸ் போட்டுக்கொண்டு காரை ஒட்டியதாக தெரிகிறது. இவர்கள் வந்த கார் கைப்புழமூட்டு அருகே வந்த போது அங்குள்ள ஆற்றுப்பாலம் வழியாக கூகுள் வழிகாட்டியுள்ளது.

இரவு நேரம் ஆகிவிட்டதால் கூகுள் மேப்சை மட்டுமே நம்பி காரை ஆற்றுப்பாலத்தில் டிரைவர் விட்டுள்ளார். ஆனால் ஆற்றுப்பாலம் முழுவதும் தண்ணீர் மூழ்கியபடி சென்றுள்ளது. இந்த ஆற்று நீரில் கார் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. காரில் பயணம் செய்த இருவரும் உயிரைக் காப்பாற்றுங்கள் என கூக்குரல் இட்டுள்ளார்கள். இரவில் திடீரென சத்தம் கேட்கிறதே என கவனித்த அப்பகுதி மக்கள், சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அப்போதுதான் கார் ஆற்று நீரில் மூழ்கி கிடப்பதை கண்டனர். உடனடியாக தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், இருவருமே சடலமாகவே மீட்கப்பட்டனர். இதற்கிடையே, அங்கு வந்த தீ அணைப்பு படையினர், ஆற்றில் இருந்து காரை மீட்டனர்.

காரில் இருந்த லக்கேஜ்களை ஆய்வு செய்ததில் டூருக்காக குமரகோம் வந்துவிட்டு கோட்டயத்திற்கு திரும்பியது கண்டறியப்பட்டுள்ளது. கோட்டயத்தில் வாடைக்கு காரை எடுத்துக்கொண்டு காரில் குமரகோம் வந்ததும் அங்கிருந்து திரும்பி செல்லும் போது விபத்தில் சிக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

ஆறுகளிலும் ஓடைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. ஆறுகளில் திடீரென ஏற்படும் வெள்ளத்தால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், கூகுள் மேப்ஸ்சை பார்த்து ஓட்டிச்சென்றால், ஆற்றுப்பாலங்கள் நீரில் மூழ்கியிருப்பது சில நேரங்களில் அப்டேட் ஆகாமல் இருக்கும்.

இது வெளியூர் வாசிகளுக்கு தெரியாது என்பதால் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். கேரளா போன்ற பகுதிகளில் பயணிக்கும் போது கூகுள் மேப்சை மட்டுமே நம்பி பயணிப்பது ஆபத்து நிறைந்தது, உள்ளூர் வாசிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதை காட்டும் வகையில் தற்போதைய விபத்து நடைபெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+