திருவனந்தபுரத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி லைட்னிங் II போர் விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதி நவீன திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்து இருக்க கூடிய சூழலில் பிரிட்டனுக்கு சொந்தமான போர் விமானம் நேற்று இரவில் திடீரென அவசரமாக தரையிறங்கியது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி லைட்னிங் II போர் விமானம் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்திய பெருங்கடலில் விமானம் பறந்து கொண்டிருந்த போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

uk-f-35-jet-forced-to-land-at-kerala-airport-during-emergency

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது

அதி நவீன திறன் கொண்ட 5-ஆம் தலைமுறை போர் விமானமான இந்த எப் 35 பி, இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமானது ஆகும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இயக்கப்பட்டு வந்த வந்த அந்த போர்க்கப்பல் சமீபத்தில்தான், இந்திய கடற்படையுடனான கூட்டு பயிற்சியை முடித்து இருந்தது.

பிரிட்டனுக்கு சொந்தமான போர் விமானம் கேரளாவில் தரையிறங்கியிருப்பது வழக்கத்திற்கு மாறானது என்று தெரிவித்த பாதுகாப்பு நிபுணர்கள், எனினும், இதற்கு முன்பாக கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று இருப்பதாக தெரிவித்தனர். இந்த எப் 35 பி விமானம் என்பது, குறுகிய தொலைவில் டேக் ஆப் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டது.

எரிபொருள் குறைந்து இருப்பதாக

பிரிட்டனுக்கு சொந்தமான HMS போர்க்கப்பலில் ஏன் அந்த விமானம் தரையிறங்கவில்லை என்பது குறித்து தெளிவான விவரம் இல்லை. அதேநேரத்தில் மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பாக அந்த போர்க்கப்பலில் தரையிறக்க முடியாது என்பதால் விமானம், திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் தரையிறங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.

தற்போது அந்த விமானத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எரிபொருள் நிரப்பும் அனுமதி கிடைத்தவுடன், அது மீண்டும் புறப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "விமானி எரிபொருள் குறைவாக இருப்பதாகக் கூறி தரையிறங்க அனுமதி கேட்டார்.

பல்துறை போர் விமானங்களில் ஒன்று

இதையடுத்து, தொழில் நுட்ப ரீதியாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன" என்றார் சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்து இருக்க கூடிய சூழலில் பிரிட்டனுக்கு சொந்தமான போர் விமானம் நேற்று இரவில் திடீரென அவசரமாக தரையிறங்கியது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரரான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35 போர் விமானம், தற்போது பயன்பாட்டில் உள்ள மிகவும் மேம்பட்ட பல்துறை போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமானத்தின் மறைந்து தாக்கும் திறன், மின்னணு போர் அமைப்புகள் மற்றும் தரவு பகிர்வு உள்கட்டமைப்பு ஆகியவை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் நேட்டோ படைகளின் வியூகத்திற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது பற்றி இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. தற்போது வரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில்தான் அந்த விமானம் நின்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+