கேரளாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அம்மாநிலத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிகபட்சமான ஒருநாள் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 421 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர்.

பாதிப்பு அதிகம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. கேரளாவில் 18,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 102 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 4,797 பேருக்கு பாதிப்பு உறுதியானது; இம்மாநிலத்தில் 130 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

பிற மாநில நிலவரம்
தமிழகத்தில் 1896; கர்நாடகாவில் 1431; ஆந்திராவில் 1506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் தொடருகிறது. மணிப்பூரில் நேற்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் மத்திய அமைச்சர்
இதனிடையே கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்து வருகிறார். இதன் முதல் கட்டமாக இன்று காலை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அவர் வந்தடைந்தார். நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 50% கேரளாவில்தான் பதிவாகி இருக்கிறது. மேலும் கேரளா முதல்வர் பினராயி விஜயனையும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended Video

அஸ்ஸாமில் நாளை ஆய்வு
கேரளா பயணத்தை முடித்துக் கொண்டு நாளை அஸ்ஸாம் செல்கிறார் மன்சுக் மாண்டவியா. அஸ்ஸாம், மேகாலயா மணிப்பூர், மிசோரம் என வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக நாளை மன்சுக் மாண்டவியா ஆராய உள்ளார்.












Click it and Unblock the Notifications