தோண்ட தோண்ட பிணங்கள்.. 300யை கடந்த கேரளா நிலச்சரிவு பலி.. 4வது நாளாக தொடங்கிய மீட்பு பணி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட உடல்கள் கிடைத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பலி எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது வரை மொத்தம் 316 பேர் பலியாகி உள்ள நிலையில் 200க்கும் அதிகமானவர்களை தேடும் பணி 4வது நாளாக தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளா இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறு, அணைகளில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 30ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

அப்போது 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு என்பது ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மலைகளில் இருந்து வந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்டவற்றால் கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன. இரவு நேரம் என்பதால் மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வீடுகளுடன் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலை 8.30 நிலவரப்படி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 300யை கடந்துள்ளது. அதாவது மொத்தம் 316 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலியார் ஆற்றில் இருந்து மட்டும் 172 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தோண்ட தோண்ட பிணங்கள் வருகின்றன. இதுதவிர இதனால் பலி எண்ணிக்கை என்பது இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏனென்றால் தற்போது வரை சுமார் 300க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர இன்னும் 200க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டு இன்றோடு 4வது நாள் ஆகிறது. இதனால் மண், சகதிக்குள் சிக்கி இருப்பவர்கள் உயிர் பிழைத்து இருப்பது கஷ்டம் என கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. அதேவேளையில் வனப்பகுதியில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க முடியும். மேலும் தற்போது மீட்பு பணி நடக்கும் இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் மீட்பு பணியை சவாலாக்கி வருகிறது.
இருப்பினும் மீட்பு குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இன்று 4வது நாளாக மீட்பு பணி என்பது தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக நேற்றைய தினம் வயநாடு முன்னாள் எம்பி ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது தந்தையை இழந்தபோது ஏற்பட்ட வலியை தற்போது உணர்வதாக ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications