சபரிமலை போராட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டது.. கேரள பாஜக ஒப்புதல்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக கேரள பாஜக தெரிவித்து இருக்கிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக கேரள பாஜக தெரிவித்து இருக்கிறது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக போராடி வந்தது. இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர். இந்த நிலையில் இதே போல் 50க்கும் அதிகமான பெண்கள் நுழைந்துள்ளதாக கேரளா அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. தற்போது இதுகுறித்து கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை பேட்டியளித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டம்
சபரிமலை பிரச்சனை தொடர்பாக பாஜகவினர் சிலர் நீண்ட நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டம் அனைத்து வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது. சபரிமலை தொடர்பான அனைத்து உண்ணாவிரத போராட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பாஜக தோல்வி
இந்த போராட்டம் தொடர்பாக கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை அளித்துள்ள பேட்டியில், நாங்கள் நினைத்தது போல இந்த போராட்டம் செல்லவில்லை. எங்களுக்கு இதன் மூலம் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. சபரிமலை தொடர்பான பாஜக போராட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டது.

ஐயப்பனின் அருள்
ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. முன்பைவிட கேரளாவில் பாஜகவிற்கு ஆதரவு அதிகம் ஆகியுள்ளது. எங்களுக்கு ஐயப்பனின் அருள் கிடைத்து இருக்கிறது. அதுவே பெரிய பாக்கியம்.

வழக்குகள்
பாஜகவினர் மீது கேரள அரசு போட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இதுவரை 5000 ஜோடிக்கப்பட்ட வழக்குகள் சபரிமலை போராட்டக்காரர்கள் இது போடப்பட்டுள்ளது. 1000 பேர் வரை இதனால் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications