திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ரகசிய அறை திறக்கப்படாதது ஏன்? என்ன இருக்கு.. மகாராணி விளக்கம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் இருக்கினற்ன. இதில் கடந்த 2011ம் ஆண்டு ஐந்து அறைகள் திறக்கப்பட்டன. இவற்றில் பல லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பி என்ற ஒரு ரகசிய அறை இன்று வரை திறக்கப்படவே இல்லை.. ரகசிய அறை திறக்கப்படாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் மகாராணி விளக்கம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் என்பது இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றகோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் தெளிவான பெயர் ஆகும்.. மகாவிஷ்ணுவின் இக்கோவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்திருக்கிறது. இக்கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்துள்ளது. சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலை கொள்ளை அடிக்க முயற்சிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதன்படி அதில் 5 அறைகள் கடந்த 2011-ம் ஆண்டு திறந்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த அறைகளில் தங்கம், வைரம், வைடூரியம், விலை உயர்ந்த மாணிக்க, மரகத கற்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் அப்போதைய மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. தற்போது அவற்றின் மதிப்பு இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது.
ஆனால் அதே ஆண்டில் கிருஷ்ண விலாசம் கொட்டாரத்தில் வேத பண்டிதர்கள் தலைமையில் நடைபெற்ற அஷ்டமங்கல தேவ பிரசன்னத்தில் 'பி' ரகசிய அறையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. 'பி' ரகசிய அறையில் கொடூர பாம்புகள் காவல் நிற்பதாகவும், அந்த அறையை திறந்தால் தீமையான சம்பவங்கள் நிகழும் என்றும் தகவல்கள் பரவின.
இந்தநிலையில், 'பி' ரகசிய அறை திறக்காமல் இருக்க உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து திருவிதாங்கூர் ராஜ குடும்ப உறுப்பினரான அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் மகாராணி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் 'பி' ரகசிய அறை எனக்கு தெரிந்தவரை திறக்கப்படவில்லை. முந்தைய காலங்களில் திறக்கப்பட்டு இருக்கலாம். அந்த அறையின் முன் பகுதியில் இரும்பு கவசத்துடன் கூடிய நீளமான திண்ணை இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன் எல்லோரும் கற்பனையில் கூறுவதை போல் பெரிய இரும்பு கதவுகளோ, கொடூர பாம்புகளின் வடிவங்களோ அங்கு கிடையாது.
'பி' ரகசிய அறையில் முனிவர்கள், தேவர்கள் பத்மநாபனை நோக்கி தியானம் செய்யும் இடம் உள்ளது. நடுப்பகுதியில் சக்கரத்தின் சக்தியுடன் கூடிய மூல பிம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய இயலாது மேலும் யக்சியம்மன் தவம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 'பி' ரகசிய அறையில், அதி சக்தி வாய்ந்த நரசிங்க சாமி குடியிருப்பதாக நம்பப்படுவதால் அந்த அறை திறக்கப்படவில்லை என்று கூறினார்.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications