கடவுள் தேசத்தின் கனவுலகம்.. உடுமலைப்பேட்டை டூ மூணாறு போறீங்களா.. மறையூரில் மறைந்திருக்கும் வில்லன்
மூணாறு: கடவுள் தேசத்தின் கனவுலகம் என்றால் அது இடுக்கி தான். இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, வாகமன், மறையூர், சின்னார் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கோவை திருப்பூர் வழியாக வருவோர், உடுமலைப்பேட்டை வழியாக மறையூரில் ஏறி மூணாறு வருகிறார். மறையூரில் விரிக்கொம்பன் யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. விரிக்கொம்பன் ரொம்ப உக்கிரமானவன் என்பதால் இருசக்கர வாகனங்களில், கார்களில் வருவோர் கவனமாக வருவது நல்லது.
கடவுளின் தேசமான கேரளாவில் இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா, கொல்லம், வயநாடு, திருச்சூர், பாலக்காடு, வயநாடு போன்ற மாவட்டங்களை மலைப்பபகுதிகளை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இதில் இடுக்கி மாவட்டமும், வயநாடு மாவட்டமும் முற்றிலும் மலைப்பகுதியில் உள்ள மாவட்டம் ஆகும்.

இடுக்கி மாவட்டம்
இதில் முக்கிய மலைப்பிரதேசமாக இடுக்கி மாவட்டம் திகழ்கிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர்களும், பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்களும் ஏராளமாக இருக்கின்றன. கண்களுக்கு விருத்தளிக்கும் வகையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், நீர்வீழ்ச்சிகள், தண்ணீர் ததும்பி நிற்கும் அணைகள் அதிகமாக இருக்கின்றன. வாழ்ந்தால் இடுக்கியில் வாழ வேண்டும் என்று ஏங்க வைக்கும் காடுகளும், கிளைமேட்டும் இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த ஊராக இடுக்கி மாவட்டம் இருக்கிறது.
வாகமன் மூணாறு
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, வாகமன், மறையூர், சின்னார், கொழுக்குமலை, டாப் ஸ்டேசன், மாட்டுப்பட்டி அணை உள்பட சிறந்த சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இவற்றை கண்டுகளிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தருகின்றனர். மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ள இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.
மூணாறு முதல் மறையூர் வரை
இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை மூணாறு முதல் மறையூர் வழியாக உடுமலைப்பேட்டை வழியாக செல்லும் சாலைகள் யானைகளின் அச்சுறுத்தல், புலிகளின் அச்சுறுத்தல் உள்ள வனப்பகுதியாகும். இரவில் இந்த சாலையில் வருவது மிகவும் சிக்கலானது. பகலிலேயே வனவிலங்குகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருக்கும். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் சுற்றுலா பயணிகளுக்கும், குடியிருப்புவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இன்று வரை இருக்கின்றன. தற்போது குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
விரிக்கொம்பன்
மறையூர் பகுதியில் 'விரிக்கொம்பன்' என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மறையூரில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை காட்டு யானையின் தந்தங்கள் இரண்டும், மாட்டிற்கு கொம்புகள் விரிந்து இருக்கும். இதனால் 'விரிக்கொம்பன்' யானை என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. மறையூர் அருகே சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் தான் விரிக்கொம்பன் வசித்து வருகிறது. இந்த யானை சின்னார், மறையூரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

அந்த சாலையில் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில, நடுரோட்டில் நடந்து வந்த காட்டு யானை அவர்களை அச்சுறுத்தியது. இதனால் யானையை கண்டதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அட்டகாசம் செய்த யானை பின்னர் அங்கிருந்து சென்றது. காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் உடுமலை மறையூர் சாலையில் கவனமாக செல்வது நல்லது. இருசக்கர வாகன ஓட்டிகள் மாலை நேரங்களில் அந்த சாலையில் பயணிக்காமல் இருப்பது நல்லது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications