Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி "விருந்தாளி" உங்களுக்காக காத்திருக்கிறார் மக்களே.. உடனே நீலகிரி கிளம்புங்க.. அட, கொத்து கொத்தா

Subscribe to Oneindia Tamil

ஊட்டி : விரைவில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரியை பொறுத்தவரை, ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகுதான் வகைவகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன... இவைகளில் பல தாவரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை. பல தாவரங்கள் பணப்பயிர்களாக திகழக்கூடியவை.

Beautiful Redleaf flowers blooming in nilgiris and Excellent Red Leaf Flowers all over Ooty for Tourists

அவர்களது ஆட்சிக்காலத்தில்தான், வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் இப்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.

ரெட்லீப் பூக்கள்: இதில் ஒன்றுதான் ரெட்லீப் மலர்கள் ஆகும்.. இந்த செடியை, ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்தார்களாம்.. அந்த காலத்தில் இதை நடவு செய்யப்பட்ட நிலையில், நீலகிரியில் உள்ள பெரிய பெரிய பங்களாக்களிலும், தேயிலை தோட்டங்களிலும், சாலையோர பகுதிகளிலும், ஓங்கி வளர்ந்து காணப்படுகின்றன இந்த ரெட்லீப் பூக்கள்.

முக்கியமாக, மஞ்சூர் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், ரெட்லீப் பூக்கள் நிறைய காணப்படும். நிறம் மாறும் தன்மை கொண்ட ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளது. ஊட்டி

இலைகள்: கண்களை கவரும் மெருன் மற்றும் சிவப்பு நிறங்களில் செடிகளின் இலைகளே பூக்களாய் காட்சி தருவது இதன் சிறப்பாகும்.. இதன் இலைகள் ஆரம்பத்தில் பச்சை கலராக இருக்கும்.. அதன்பிறகு, பழுப்பு நிறமாகவும், அதன்பிறகு மஞ்சள் கலராகவும், பிறகு மெருன் கலராக மாறி, கடைசியில் ரெட் கலருக்கு வந்துவிடும்.

கிட்டத்தட்ட பிரவுன் கலர் என்றே சொல்லலாம்.. இந்த ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பூக்களுக்கு நிறைய அபிமானர்கள் உண்டு.. காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறக்கூடியது.. டக் டக்கென கலர்கள் ஒவ்வொன்றாக மாறுவதால்தான், இந்த பூக்களுக்கு, "நிறம் மாறும் பூக்கள்" என்று அழைக்கின்றனர். அதேபோல, ரெட்லீப் செடிகளுக்கு விதைகள் கிடையாது.. பதியம் போடும் முறையில் மட்டுமே இதனை வளர்க்க முடியும்.

வண்ண மலர்கள்: பூத்துக்குலுங்கும் இந்த ரெட்லீப் பூக்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு எப்போதுமே விருந்தாக அமைந்துவிடும். சாலையோரங்களில் வண்ண வண்ணமாக ஜொலிக்கும் இந்த பூக்களின் முன்பாக நின்று, சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்காமல் செல்வது கிடையாது. அந்த அளவுக்கு கவர்ச்சியை தரக்கூடியது இந்த ரெட்லீப் பூக்கள்.

இதோ கோடை காலம் தொடங்கிவிட்டது.. ஊட்டியில் ரெட்லீப் பூக்கள் தொடங்கிவிட்டன.. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்க இந்த "சிவப்பு கலர் விருந்தாளி" காத்திருக்கிறார்.. கொத்து கொத்தாக பூத்திருக்கிறார்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+