ஊட்டி "விருந்தாளி" உங்களுக்காக காத்திருக்கிறார் மக்களே.. உடனே நீலகிரி கிளம்புங்க.. அட, கொத்து கொத்தா
ஊட்டி : விரைவில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரியை பொறுத்தவரை, ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகுதான் வகைவகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன... இவைகளில் பல தாவரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை. பல தாவரங்கள் பணப்பயிர்களாக திகழக்கூடியவை.

அவர்களது ஆட்சிக்காலத்தில்தான், வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் இப்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.
ரெட்லீப் பூக்கள்: இதில் ஒன்றுதான் ரெட்லீப் மலர்கள் ஆகும்.. இந்த செடியை, ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்தார்களாம்.. அந்த காலத்தில் இதை நடவு செய்யப்பட்ட நிலையில், நீலகிரியில் உள்ள பெரிய பெரிய பங்களாக்களிலும், தேயிலை தோட்டங்களிலும், சாலையோர பகுதிகளிலும், ஓங்கி வளர்ந்து காணப்படுகின்றன இந்த ரெட்லீப் பூக்கள்.
முக்கியமாக, மஞ்சூர் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், ரெட்லீப் பூக்கள் நிறைய காணப்படும். நிறம் மாறும் தன்மை கொண்ட ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளது. ஊட்டி
இலைகள்: கண்களை கவரும் மெருன் மற்றும் சிவப்பு நிறங்களில் செடிகளின் இலைகளே பூக்களாய் காட்சி தருவது இதன் சிறப்பாகும்.. இதன் இலைகள் ஆரம்பத்தில் பச்சை கலராக இருக்கும்.. அதன்பிறகு, பழுப்பு நிறமாகவும், அதன்பிறகு மஞ்சள் கலராகவும், பிறகு மெருன் கலராக மாறி, கடைசியில் ரெட் கலருக்கு வந்துவிடும்.
கிட்டத்தட்ட பிரவுன் கலர் என்றே சொல்லலாம்.. இந்த ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பூக்களுக்கு நிறைய அபிமானர்கள் உண்டு.. காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறக்கூடியது.. டக் டக்கென கலர்கள் ஒவ்வொன்றாக மாறுவதால்தான், இந்த பூக்களுக்கு, "நிறம் மாறும் பூக்கள்" என்று அழைக்கின்றனர். அதேபோல, ரெட்லீப் செடிகளுக்கு விதைகள் கிடையாது.. பதியம் போடும் முறையில் மட்டுமே இதனை வளர்க்க முடியும்.
வண்ண மலர்கள்: பூத்துக்குலுங்கும் இந்த ரெட்லீப் பூக்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு எப்போதுமே விருந்தாக அமைந்துவிடும். சாலையோரங்களில் வண்ண வண்ணமாக ஜொலிக்கும் இந்த பூக்களின் முன்பாக நின்று, சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்காமல் செல்வது கிடையாது. அந்த அளவுக்கு கவர்ச்சியை தரக்கூடியது இந்த ரெட்லீப் பூக்கள்.
இதோ கோடை காலம் தொடங்கிவிட்டது.. ஊட்டியில் ரெட்லீப் பூக்கள் தொடங்கிவிட்டன.. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்க இந்த "சிவப்பு கலர் விருந்தாளி" காத்திருக்கிறார்.. கொத்து கொத்தாக பூத்திருக்கிறார்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications