ஊட்டி "விருந்தாளி" உங்களுக்காக காத்திருக்கிறார் மக்களே.. உடனே நீலகிரி கிளம்புங்க.. அட, கொத்து கொத்தா
ஊட்டி : விரைவில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரியை பொறுத்தவரை, ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகுதான் வகைவகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன... இவைகளில் பல தாவரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை. பல தாவரங்கள் பணப்பயிர்களாக திகழக்கூடியவை.

அவர்களது ஆட்சிக்காலத்தில்தான், வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் இப்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.
ரெட்லீப் பூக்கள்: இதில் ஒன்றுதான் ரெட்லீப் மலர்கள் ஆகும்.. இந்த செடியை, ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்தார்களாம்.. அந்த காலத்தில் இதை நடவு செய்யப்பட்ட நிலையில், நீலகிரியில் உள்ள பெரிய பெரிய பங்களாக்களிலும், தேயிலை தோட்டங்களிலும், சாலையோர பகுதிகளிலும், ஓங்கி வளர்ந்து காணப்படுகின்றன இந்த ரெட்லீப் பூக்கள்.
முக்கியமாக, மஞ்சூர் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், ரெட்லீப் பூக்கள் நிறைய காணப்படும். நிறம் மாறும் தன்மை கொண்ட ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளது. ஊட்டி
இலைகள்: கண்களை கவரும் மெருன் மற்றும் சிவப்பு நிறங்களில் செடிகளின் இலைகளே பூக்களாய் காட்சி தருவது இதன் சிறப்பாகும்.. இதன் இலைகள் ஆரம்பத்தில் பச்சை கலராக இருக்கும்.. அதன்பிறகு, பழுப்பு நிறமாகவும், அதன்பிறகு மஞ்சள் கலராகவும், பிறகு மெருன் கலராக மாறி, கடைசியில் ரெட் கலருக்கு வந்துவிடும்.
கிட்டத்தட்ட பிரவுன் கலர் என்றே சொல்லலாம்.. இந்த ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பூக்களுக்கு நிறைய அபிமானர்கள் உண்டு.. காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறக்கூடியது.. டக் டக்கென கலர்கள் ஒவ்வொன்றாக மாறுவதால்தான், இந்த பூக்களுக்கு, "நிறம் மாறும் பூக்கள்" என்று அழைக்கின்றனர். அதேபோல, ரெட்லீப் செடிகளுக்கு விதைகள் கிடையாது.. பதியம் போடும் முறையில் மட்டுமே இதனை வளர்க்க முடியும்.
வண்ண மலர்கள்: பூத்துக்குலுங்கும் இந்த ரெட்லீப் பூக்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு எப்போதுமே விருந்தாக அமைந்துவிடும். சாலையோரங்களில் வண்ண வண்ணமாக ஜொலிக்கும் இந்த பூக்களின் முன்பாக நின்று, சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்காமல் செல்வது கிடையாது. அந்த அளவுக்கு கவர்ச்சியை தரக்கூடியது இந்த ரெட்லீப் பூக்கள்.
இதோ கோடை காலம் தொடங்கிவிட்டது.. ஊட்டியில் ரெட்லீப் பூக்கள் தொடங்கிவிட்டன.. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்க இந்த "சிவப்பு கலர் விருந்தாளி" காத்திருக்கிறார்.. கொத்து கொத்தாக பூத்திருக்கிறார்..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications