ஈரோடு சத்தியமங்கலம் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளத்தில் மூடப்படும் ரிசார்ட்டுகள்.. அதிரடியாக சீல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் செயல்பட்டு வந்தன. இங்கு செயல்பட்டு வரும் ரிசார்டுகள் தேசிய வன விலங்குகள் வாரியம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த புகாரில் தற்போது சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள், புலிகள் சிறுத்தைப்புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள் என ஏராளமான விலங்குகள் இருக்கிறது. இந்த புலிகள் வனப்பகுதியையொட்டி தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் ஆகிய ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தேசிய வனவிலங்கு வாரியம் மலைப்பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் சத்தியமங்கலம் புலிகள் சரணாலத்தில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து 4 வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம் ஆகிய பகுதியில் உள்ள 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத விடுதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை வருகிற 19-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் சட்டவிரோத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் ஈரோடு கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்குட்பட்ட தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தங்கும் விடுதிகள் வைத்திருப்போர் வருகிற 13-ந் தேதிக்குள் உரிய அனுமதி பெறவேண்டும். இல்லை என்றால் அவைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றார்கள். இந்நிலையில் இன்று அனுமதி பெறாத ரிசார்ட்டுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications